Skip to main content

கிராம சபை கூட்டம் ரத்து... காரணம் கரோனாவா? வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டமா?

Published on 01/10/2020 | Edited on 02/10/2020

 

 Village council meeting canceled... Is it because of Corona? or Struggle against the Agriculture Bill?

 

நாளை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, இந்தியா முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூடும் நாள். இந்த கிராம சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதனால் தான் கடந்த காலங்களில் புதுக்கோட்டை நெடுவாசல் உள்பட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், இளைஞர்கள் தீர்மானங்களைக் கொண்டு வந்தனர். பல ஊராட்சிகளில் அரசு தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானம் எழுதப்படாமல் மனுவாக மட்டுமே பெற்றுச் சென்றனர். பல கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அதேபோல, ஜனவரியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மே தினத்தில் கிராம சபைக்கூட்டம் நடக்கவில்லை.



இந்நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி (நாளை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வழக்கமாக நடக்கும் கிராம சபைக்கூட்டங்களை நடத்த தமிழக அரசு அறிவித்து அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டிருந்தது. கிராம சபைக் கூட்டம் நடக்க உள்ளதால் ஒவ்வொரு கிராமத்திலும் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறவலியுறுத்தி கிராம சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

அதேபோல விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கங்களும் விவசாயிகள், இளைஞர்களும் விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன. மற்றொரு பக்கம் ஒவ்வொரு கிராமத்தில் கிராம சபை நடத்த துண்டறிக்கைகள் அச்சடித்து விளம்பரங்கள் செய்துள்ள நிலையில் கரோனா பரவலைக் காரணம் காட்டி மதுரை, திருச்சி, திருவாரூர், நெல்லை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், நாமக்கல், ராமநாதபுரம், தர்மபுரி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஊராட்சிகளுக்கு வீண் செலவுகள் ஏற்பட்டுள்ளது.

 

கிராம சபை கூட்டம் நடந்தால் வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவார்கள் என்பதால் கரோனாவை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்துச் செய்துள்ளனர். மேலும், வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து பரவி வருவதாலும், சிறுமி வன்கொடுமைக்கு நீதி கேட்பு போராட்டம், காங்கிரஸ் ராகுல்காந்தி மீது தாக்குதல் சம்பவங்களுக்காக காங்கிரஸ் போராட்டம் என நாடே போராட்டக்களமாகி வருவதால் போராட்டங்களை முடக்க கரோனாவை காரணம் காட்டி மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

 

Ad

 


குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்த போராட்டம் வலுவடையும் போதும் போராட்டங்களை முடக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கரோனா கைகொடுத்தது போல தற்போதைய போராட்டங்களுக்கும் கரோனா கைகொடுக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.