Skip to main content

விஜய் கண் முன்னே ரசிகர்கள் கைகலப்பு - நாற்காலிகளை உடைத்து ரகளை

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
vijay

 

புதுச்சேரியில் நடிகர் விஜய் பங்கேற்ற திருமண விழாவில் ரசிகர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.  நாற்காலிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

 

vck

 

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த்.  இவர் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.  இவரது மகள்  அங்காள பரமேஸ்வரி திருமணத்தின் வரவேற்பு நிகழ்வு  புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள மதுரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   விஜய் தனது மனைவி  சங்கீதாவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

 

விஜய்யின் வருகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்கள் கட் -அவுட், போஸ்டர்கள் வைத்து பரபரப்பை ஏற்பட்டுத்தினர்.  விஜய்யை பார்க்கும் ஆவலில் திருமண மண்டபத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.  மண்டபத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.  இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.  ஆனாலும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்தது.   மிகுந்த போராட்டத்திற்கு பின்னர்தான் விஜய் மண்டபத்திற்கு உள்ளே சென்றார்.

 

v v

 

விஜய்யை பார்க்கும் ஆவலில்    ரசிகர்கள் எல்லோரும்  நாற்காலியின் மேல் ஏறி நிற்க முற்பட்டனர்.  ரசிகர்கள் பலரும் செல்போனில் விஜய்யை படம் பிடித்தனர்.  சிலர் செல்பி எடுக்க முயன்றனர்.  அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ரசிகர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.  நாற்காலிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.  இதனால் பதற்றம் நிலவியது.  நிலைமையை உணர்ந்து மணமக்களை வாழ்த்திய விஜய் உடனடியாக மண்டபத்தை விட்டு வெளியேறினார்.  பின்னர் கூட்டம் கலைந்து சென்றதால் பதற்றம் நீங்கியது.

 

vaiko1

 

vaiko1

 

vaiko1

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“விஜய் பயந்து போய்ட்டா என்ன பண்ண முடியும்” - சீமான் கேள்வி

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Seeman spoke about his political journey with Vijay

 

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாள் பெருவிழா நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இந்நிகழ்விற்குப் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டம். அது பட்டயம் கிடையாது. இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்க வேண்டும். எதார்த்தம் அதுதானே. சரத்குமார் சொல்வது சரிதானே. ரஜினிகாந்த் கூட ஆமாம் என்று தான் சொல்கிறார். அதை ரஜினிகாந்தே ஒத்துக்கொள்கிறார். 

 

2024 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா எனக் கேட்கின்றனர். அதை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அன்று தான் யோசிக்கனும். விஜய்யின் ரசிகர்களை கவர்வதற்காக பேசுவதாகச் சொல்கிறார்கள். அது அப்படி இல்லை. சூர்யா, கார்த்திக் போன்றோருக்கு நெருக்கடி வரும்பொழுதும் பேசியுள்ளேன். 

 

நாங்க தனிச்சுப் போட்டியிட எப்பொழுதும் தயாராக உள்ளோம். பேரம் பேசுவோம். கூட்டணி பேசுவோம் என்ற சிந்தனை இல்லை. வந்தாலும் அதை அன்றைக்குத்தான் பேச வேண்டும். முதலில் விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டும். கொள்கையை முன்வைக்க வேண்டும். எனக்கு சில கொள்கைகள் உள்ளது. அது போல் அவருக்கும் கொள்கைகள் இருக்க வேண்டும். நான் அவரை அமர வைத்து விட்டு பிரபாகரன் வாழ்க எனச் சொல்லி விஜய் பயந்துவிட்டால் என்ன செய்வது.

 

நான் விஜய்யை சந்திக்கவில்லை. அவரது வீட்டு வாசலில் நடந்து போனேன். நானும் பாரதிராஜாவும் நடைபயணம் மேற்கொண்டுள்ள போது வாயிற்காவலரிடம் விஜய் உள்ளாரா எனக் கேட்பேன். இதுதான் நடந்தது” எனக் கூறினார்.