Skip to main content

கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வந்த சுற்றுலா சோகத்தில் முடிந்தது

Published on 27/02/2019 | Edited on 27/02/2019


வேலூர் மாவட்டம் ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலைக்கு, சென்னை போரூர் பகுதியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர்கள் பிப்ரவரி 26 ந்தேதி காலை சுற்றுலா  வந்தனர். 

k

 

மதியம் சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் வாணியம்பாடி அருகே கலந்தரா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த சிவா, ஜானகிராமன், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது, ஒவ்வொருவரும் ஒரு உதவி செய்தனர், பலர் வேடிக்கை பார்த்தனர்.

 

d

 

அப்போது வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அரசு விழாவில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் அதிகாரிகள் அவ்வழியாக காரில் சென்றனர். மக்கள் கூட்டம் பதட்டமாக இருப்பதை பார்த்து காரை நிருத்தி விசாரித்தனர். விபத்து நடந்து இருப்பது அறிந்து உடனடியாக காரில் இருந்து இறங்கி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 

சார்ந்த செய்திகள்