Published on 04/05/2018 | Edited on 04/05/2018

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் தமிழகத்திலே எழுதுவதற்கும், மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்க்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும் சென்னை அண்ணா நகரில் CBSE- NEET அலுவலகத்தில் மண்டல அலுவலரை இன்று 04.05.2018 பகல் 2.00 மணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் சந்தித்து மனு அளித்தார். பின்னர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.