Skip to main content

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி! தொலைபேசியில் அறிவித்த வேல்முருகன்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019
v

 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது.    இந்த பொதுக்குழுவில்   வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது, நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது சம்பந்தமாக விவாதிக்கபட்டது.

 

v

 

இந்த பொதுக்குழுவில் மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   பொதுக்குழுவில் தமிழ வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கலந்து கொள்ளவில்லை என்றாலும், மாநில நிர்வாக குழு உறுப்பினர் தி.திருமாவளவன்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 

v

 

கூட்டத்தின்போது  தொலைபேசி மூலமாக பேசிய வேல்முருகன்,  "பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி"யிடபோவதாக அறிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்