Skip to main content

'வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு'- 144 தடை உத்தரவை அறிவித்த ஆட்சியர்!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

 Vaitheeswaran Temple festival mayiladuthurai district collector announcement

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு வைத்தியநாதசுவாமி, தையல் நாயகி இருவரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (28/04/2021) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ளது.

 

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இன்று (28/04/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நான்கு ரத வீதிகளில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க, வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஐந்து பேருக்கு மேல் கூட்டமாகக் கூடுவதற்கு தடை, மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்களைத் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்படுகிறது. நாளை (29/04/2021) அதிகாலை 04.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Mayiladuthurai Congress candidate announcement!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை நேற்று (25.03.2024) காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார். 

Next Story

மயிலாடுதுறை தொகுதி யாருக்கு?; மல்லுக்கட்டும் கதர்சட்டை பிரமுகர்கள்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Mayiladuthurai constituency for whom
எஸ்.எம்.பி. துரைவேலன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் மயிலாடுதுறை உள்பட 2 தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல் கட்சியின் தேசிய தலைமை தவித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஒரு வருடத்திற்கு மேலாக களப்பணி செய்து தி.மு.க. கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில் தான் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கியுள்ள நிலையில் அந்த சீட்டுக்காக திருவாரூர் மாவட்டத் தலைவர் மன்னார்குடி எஸ்.எம்.பி. துரைவேலன் பீல்டு அரசியலில் உள்ள எனக்கு தான் சீட்டு வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு 200 க்கு மேற்பட்ட கதர் சட்டைக்காரர்களை அழைத்துச் சென்று விருப்ப மனு கொடுத்துவிட்டு காத்திருக்கிறார். அதே சீட்டுக்காக ராகுல்காந்தி உள்பட டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ள மயிலாடுதுறையில் இருந்து டெல்லியில் இடம்பெயர்ந்துள்ள சிஇஓ பிரவின் சக்கரவர்த்தி டெல்லி அரசியல் மூலமாகவே சீட்டுக்காக போராடிவருகிறார்.

ராகுல்காந்திக்கு நெருக்கமானவராக உள்ளதாக கூறி சீட்டு வாங்கிவிட பிரவின் சக்கரவர்த்தி முயன்று வரும் நிலை அறிந்து திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலனின் மகன் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான பிரவின் தனது தந்தையை டெல்லிக்கே அழைத்துச் சென்று சில நாட்கள் முகாமிட்டு கார்க்கே உள்ளிட்ட தேசிய தலைவர்களை சந்தித்து உள்ளூரிலேயே இருந்து உள்ளூர் மக்களுடன் பழகி மக்களுடன் மக்களாக உள்ள எங்க அப்பாவுக்கு சீட்டு கொடுங்கள். வெற்றி பெற்று இந்திய கூட்டணியின் கரத்தை பலப்படுத்துவோம் என்று நம்பிக்கையாக கூறியுள்ளார்.

Mayiladuthurai constituency for whom
பிரவின் சக்கரவர்த்தி

இதனால் டெல்லியில் உள்ளவருக்கு சீட்டு கொடுப்பதா இல்லை தொகுதியிலேயே இருந்து லோக்கல் அரசியல் செய்பவருக்கு சீட்டு ஒதுக்குவதா என்று கதர்சட்டை தேசிய தலைமைக்கே குழப்பம் நீடிப்பதால் நேற்றைய வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறை விடுபட்டுள்ளது. இதற்கிடையில் மயிலாடுதுறையை எனக்கு கொடுங்கள் என்று திருநாவுக்கரசரும் டெல்லியில் முகாமிட்டுள்ளாராம். இன்று இரவு கூடும் தேசிய தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படலாம் என்ற நிலை உள்ளது. பெரும்பாலும் தொகுதியிலேயே சுற்றி வருபவருக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள் விபரமறிந்த கதர்சட்டைகள். யாருக்கோ சீட்டு ஒதுக்குங்க வேட்பு மனுவுக்கு கடைசி நாள் வரப்போகுது என்கின்றனர் கூட்டணி கட்சியினர்.