Skip to main content

"தடுப்பூசி பணி: 13 சுகாதார மாவட்டங்களில் திருப்தி இல்லை" - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

"Vaccination work: 13 health districts are not satisfied" - Chief Secretary's letter to district collectors!

 

தமிழ்நாட்டில் 13 சுகாதார மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்திடுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். 

 

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்துள்ள தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தியது. மேலும், தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து அறிவுறுத்திடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார். 

 

அதன்படி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் மிகச் சிறப்பாக உள்ளது. விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் திருப்தியாக இல்லை. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பின்தங்கிய சுகாதார மாவட்டங்களில், அப்பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தி அம்மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறை சம்மன்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Enforcement Department Summons; Supreme Court action order

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்ககளுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழஙக வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். 

Next Story

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்பை வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், இன்று (01-04-24) காலை 11.30 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேப்பேரி ரித்தர்டன் சாலையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை பார்வையிட்டு பூத் ஸ்லிப் வழங்கினார்.