Skip to main content

ஆள் இல்லாத வீட்டை உரிமையாளர் போல் நடித்து வாடகைக்கு விட்ட நபர்கள்!  

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Unoccupied housing; Persons rented to other persons!

 

நாகை ஆண்டோ சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவரது கணவர் முருகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி மூன்று குழந்தைகளுடன் நாகையில் ஆண்டோ நகரில் வசித்து வந்துள்ளார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மூன்று குழந்தைகளையும் வைத்துக்கொண்டு தனி ஆளாக சமாளிக்க முடியாமல் வீட்டைப்பூட்டிவிட்டு தூத்துக்குடியில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று 6 மாத காலமாக குழந்தைகளோடு அங்கு இருந்துள்ளார். 

 

வீட்டை பூட்டிவிட்டு நந்தினி சென்றதை நோட்டமிட்ட, பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்த பாலமுருகன், சிலம்பரசன் உள்ளிட்ட கும்பல் இரண்டு மாடிகள் கொண்ட நந்தினியின் வீட்டை வேறு இரண்டு நபர்களிடம் அடமானத்திற்கு கொடுத்து தங்க வைத்துள்ளனர். அதன்படி சம்பத் என்பவரிடம் மூன்றரை லட்சம் பெற்றுக்கொண்டு கீழ் வீட்டையும், ஐயப்பன் என்பவரிடம் மூன்றரை லட்சம் பெற்றுக்கொண்டு மேல் வீட்டையும் வீட்டின் உரிமையாளர் போல பத்திரம் தயார் செய்து குடி வைத்துள்ளனர். 

 

இதுகுறித்து தகவலறிந்த நந்தினி, பதறிதுடித்துக்கொண்டு தனது கணவர் பெயரில் உள்ள பட்டா, சிட்டா பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு மாமியாரை அழைத்துக்கொண்டு குழந்தைகளுடன் நாகைக்கு விரைந்துவந்து வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டிருக்கிறார், அவர்களோ எங்கள் வீடு என மிரட்ட வேறுவழியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் நாகூர் போலீசாருக்கு தெரியவரவே அங்கு வந்து அவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர், நந்தினியோ அங்கேயே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

 

Unoccupied housing; Persons rented to other persons!

 

விசாரணையில் நாகையைச் சேர்ந்த பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி சிறை சென்ற ராஜேஸ்வரி என்பவரின் உடன் பிறந்த சகோதரி நந்தினி என்பதும், ராஜேஸ்வரியிடம் பணம்கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வீட்டை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

 

தர்ணாவில் ஈடுபட்டுவரும் நந்தினி, "எனது அக்கா வாக்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும், அவரது கடனுக்காக என்னுடைய சொத்தை எப்படி பத்திரமோசடி செய்து, எனது கனவரின் கையெழுத்தை போலியாக போட்டு அபகரிக்கமுடியும். எனது வீட்டை அபகரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத்தர வேண்டும்" என்கிறார். 

 

இதற்கிடையில் பணம்கொடுத்துவிட்டு வாடகைக்கு வந்திருப்பவர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.