Skip to main content

“உதயநிதி ஸ்டாலின் மிகவும் ராசியானவர்...”- ஐ.பி.செந்தில்குமார்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Udayanithi Stalin is very favourable person ...

 

பழனியில் உதயநிதி ஸ்டாலின்  மற்றும் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் பழனி நகர உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்றம் செயலாளர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

 

மேலும் பழனி அரசு மருத்துவமனைக்கு மின்விசிறி, கட்டில், மெத்தை போன்ற உபகரணங்களையும் தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் வழங்கினர். இதில் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. ஆயிரம் பயனாளிகளுக்குத் தையல் மெஷின், சலவைப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டன. அப்போது பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பேசும் போது, “உதயநிதி ஸ்டாலின் மிகவும் ராசியானவர், கடந்த  பாராளுமன்றத் தேர்தலில் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற அடித்தளம் அமைத்தார்.

 

Udayanithi Stalin is very favourable person ...

 

அதே போல சட்டமன்ற தேர்தலின் போதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்கு உதயநிதி ஸ்டாலினின் சூறாவளி பிரச்சாரம் காரணமாக அமைந்தது. உதயநிதி ஸ்டாலின் கையிலெடுத்த முதல் எய்ம்ஸ் செங்கல் திமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்ததாக” கூறினார். இதில் ஏராளமான பொதுமக்களும், கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். அதன் பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு ஐ .பி. செந்தில்குமார் மற்றும் நற்பணி மன்ற மாநில செயலாளர் பாபு ஆகியோர்  பழநி மலையில் தங்கத் தேர் இழுத்து முருகப் பெருமானை வழிபட்டுச் சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது