Skip to main content

இரண்டு புலியைக் கொன்றவர் கைது! 

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Two tiger passes away case police arrested one

 

நீலகிரி மாவட்டம், உதகை அருகே இரண்டு புலிகள் உயிரிழந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, புலிகள் இறந்து கிடந்த பகுதிக்கு அருகே பசுமாடு ஒன்றும் உயிரிழந்து கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், விலங்குகள் விஷம் வைத்து  கொல்லப்பட்டிருக்கலாம் எனவும்  சந்தேகம் எழுந்தது. இதனால், வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் தற்போது மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி நேரு நகர் பகுதியில் 8 வயதான புலியும் மற்றொரு வனப்பகுதியில் 3 வயதான மற்றொரு புலியும் இறந்து கிடந்தது தொடர்பான தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக் கிழமை தெரிய வந்தது. இந்த பகுதிகளுக்கு அருகே மாடு ஒன்றும் உயிரிழந்து கிடந்துள்ளது. இது வனத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே விலங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. பின்னர், நீலகிரி வன கோட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

விலங்குகள் இறந்து கிடந்த பகுதியை சுற்றி வனத் துறையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது தான், அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவரின் மாடு சமீபத்தில் காணவில்லை என்பதனை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சேகரை வனத்துறையினர் விசாரிக்க தொடங்கினர். விசாரணையின் போது, சேகரின் மாடு வனவிலங்கால் தாக்குண்டு இறந்துள்ளதும். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் மாட்டின் உடலில் பூச்சி மருந்தை தடவியுள்ளதாக சேகர் வனத்துறையிடம் கூறியுள்ளார். இதனடிப்படையில், சேகர் கைது வனத்துறையினரால் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

 

மேலும், ஆனைக்கட்டி அருகே உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்திற்கும். கோயம்புத்தூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு புலிகளின் உறுப்பு மாதிரிகள் தடயவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், புலிகள் இறந்த காரணத்தை சரியாக கண்டறியப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு-வருகிறது இ-பாஸ் நடைமுறை?

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
E-pass to Ooty and Kodaikanal

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு ஒன்றில் வரும் மே 7ஆம் தேதி முதல் உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் இ-பாஸ் வாங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என அரசுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே சுற்றுலாத்தலங்களில் அனுமதி தர வேண்டும். உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Next Story

ஒரே நாளில் குவிந்த கூட்டம்; உதகையில் போக்குவரத்து நெரிசல்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Crowds gathered in one day; Traffic jam in the ooty

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தற்போது இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகையில் நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஒரு வழிச்சாலையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சாலைகள் மாற்றப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. உதகை தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா சாலை, கூடலூர் சாலை, பேருந்து நிலையம் செல்வதற்கான சாலை என அனைத்து சாலைகளிலும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.