Skip to main content

அருப்புக்கோட்டை அருகே இரட்டைக்கொலை

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Two passed away in arupukottai
ரத்தினவேல் பாண்டியன்

 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தனர். இதுதொடர்பாக 5 பேர் மீது அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. டி.ஐ.ஜி பொன்னி நேரில் விசாரணை நடத்துகிறார்.

 

என்ன முன்விரோதம்?

திமுக மகளிரணி துணை அமைப்பாளரும், திருச்சுழி வட்டம், உடையனாம்பட்டி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியுமான ராக்கம்மாள், கடந்த மார்ச் 12-ஆம் தேதி குடும்பப் பிரச்சினையால், உறவினர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருச்சுழி காவல்நிலையம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தது. இந்தக் கொலைவழக்கில் தொடர்புடைய உடையனாம்பட்டியைச் சேர்ந்த சபரிமலை ஜாமீனில் வெளிவந்து திருச்சுழி வட்டம், குலசேகரநல்லூரைச் சேர்ந்த தனது உறவினரான ரத்தினவேல் பாண்டியன் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், சபரிமலையும் ரத்தினவேல் பாண்டியனும் அருப்புக்கோட்டை காந்தி நகர் அருகிலுள்ள புதர்க்காட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராக்கம்மாள் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே இந்த இரட்டைக்கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

Two passed away in arupukottai
சபரிமலை

 

சம்பவ இடத்திற்குச் சென்று நள்ளிரவில் இருவரது சடலங்களையும் அருப்புக்கோட்டை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், கொலை நடந்த இடத்தில் விருதுநகர்  மாவட்ட எஸ்.பி. மனோகர் தலைமையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்துள்ளனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர்.   மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி நேரில் வந்து ஆய்வு செய்து, விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார். நடந்த இரட்டைக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர குற்றப்பிரிவு காவல்துறையினர், உடையனாம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சந்தன மகாலிங்கம், சுந்தர்ராஜ் மகன் கருப்பையா, மற்றும் சிவகாசியைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பையா, சுந்தர்ராஜ் மகன் பெரியசாமி, சுந்தர்ராஜ் மகன் குருசாமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

 

Two passed away in arupukottai

 

இந்நிலையில், இந்த இரட்டைக்கொலையில் தொடர்புடையவராகக் கருதப்படும் உடையனாம்பட்டி ராக்கம்மாளின் மகன்களான சூரியபிரகாஷ், ஜெயப்பிரகாஷ், மற்றொருவரான முகேஷ்குமார் ஆகிய மூவரும் மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர், இக்கொலையில் தொடர்புடையவர்களாகக் கருதி வழக்குப்பதிவு செய்து 5 பேரைத் தேடிவரும் நிலையில், மதுரை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சரணடைந்த மூவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான் என்பவர் தனது கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.