Skip to main content

சேலத்தில் மான் இறைச்சி விற்க முயன்ற இருவர் கைது! கார், ஸ்கூட்டர் பறிமுதல்!!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

சேலத்தில் மான் இறைச்சியுடன் சுற்றிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாநகர காவல்துறையினர் கோரிமேடு பகுதியில் ஜூலை 25ம் தேதி மாலை, வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஓர் இன்னோவா கார் வந்தது. அதைப் பின்தொடர்ந்து பதிவு எண் இல்லாத ஜூபிடர் ஸ்கூட்டரில் ஒரு வாலிபரும் வந்து கொண்டிருந்தார். அவ்விரு வாகனத்தில் வந்தவர்களையும் காவல்துறையினர் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறினர்.

 

 Two arrested for trying to sell deer meat in Salem Car, scooter confiscated !!


அந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் ஒரு பாலிதீன் பையில் பச்சைக்கறி மற்றும் ஒரு விலங்கின் நான்கு கால்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவை மான் இறைச்சி மற்றும் கால்கள் என்பது தெரிய வந்தது. ஸ்கூட்டர் வாகனத்தை ஓட்டி வந்தவர், சேலம் அய்யந்திருமாளிகையைச் சேர்ந்த சுப்ரமணி மகன் லோகநாதன் (25) என்பதும் தெரிய வந்தது.  இன்னோவா காரின் பின்பக்க இருக்கை அருகே ஒரு பாலிதீன் பையிலும் அவர்கள் மான் இறைச்சியை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் ஓமலூர் மூங்கில்பாடியைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் லட்சுமணன் (30) என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கு வனத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் சேலம் சரக வனத்துறை வசம் ஒப்படைத்தனர். 

 

 Two arrested for trying to sell deer meat in Salem Car, scooter confiscated !!


மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு 72 மணி நேரத்திற்கு மேல் ஆனதால், துர்நாற்றம் வீசியது. அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக துர்நாற்றம் வீசாமல் இருக்க, வனத்துறையினர் இறைச்சி மீது ஃபினாயில் தெளித்து வைத்திருந்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் (டிஎப்ஓ) பெரியசாமி கூறுகையில், ''பிடிபட்ட லோகநாதன் தனது ஸ்கூட்டர் வாகனத்தை அயோத்தியாப்பட்டணம் பகுதியில் நிறுத்திவிட்டு லட்சுமணனுடன் ஒன்றாக ஒரே காரில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொய்யப்பட்டி கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.

 

 Two arrested for trying to sell deer meat in Salem Car, scooter confiscated !!

 

அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு பேரிடம் இருந்து மான் இறைச்சியை விலைக்கு வாங்கி சேலத்திற்கு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இருவரிடம் இருந்து 14 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க சேர்வராயன் தெற்கு சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களிடம் மான் இறைச்சி விற்றவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய வன விலங்குகள் சட்டம் 1972ன் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது,'' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.