Skip to main content

கேரளா கள்ள நோட்டு அச்சடிப்பில் சிக்கிய டி.வி நடிகை சிறையில் கண்ணீர் வடிப்பு!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

கேரளா கள்ள நோட்டு அச்சடிப்பில் சிக்கிய டி.வி நடிகை சூா்யவுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களால் கள்ள நோட்டு அச்சடிப்பில் சிக்கி சிறையில் கண்ணீா் வடித்து கொண்டிருக்கிறாள்.
 

மழவில் மனோரமா  சேனலில் ஔிப்பரப்பான பாிணயம், மாமாங்கம் சீாியலில்  நடித்து தனது சிறந்த நடிப்பாற்றலால் கேரளா மக்கள் மனதில் இடம் பிடித்தாா் சூர்யா. நல்ல வசதியான குடும்பத்தை சோ்ந்த சூர்யாவின் தந்தை சசிகுமாா் துபாயில் நகை கடை ஓன்றில் 5 பாட்னா்களில் ஒருவராக இருந்து வந்தாா். அந்த நேரத்தில் தான் சூர்யாவுக்கு 300 பவுன் நகை போட்டு ஆடம்பரமாக திருமணம் நடந்தது. 
 

இந்த நிலையில் தான் சூர்யாவின் தந்தை சசிக்குமாரை பாட்னா் ஓருவா் துபாயில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா். பின்னா் துபாயில் இருந்த சூா்யாவின் தயாா் ரமாதேவி தங்கை ஸ்ருதி இருவரும் கொல்லத்தில் அவா்களுடைய ஆடம்பர பங்களாவுக்கு வந்தனா். அதன்பிறகு சூா்யாவை கணவா் ஏமாற்றி விட்டு சென்று விட்டாா்.  இந்தநிலையில் தான் 2012-ல் டி.வி.சீாியலில் துணை வில்லி கேரக்டாில் நடிக்க வாய்ப்பு கிடைத்து  நடித்தாா். அவளின் நடிப்பை பாா்த்து பாிணயம் சீாியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது மழவில் மனோரமா என்ற சேனலில் ஔிபரப்பானது. அதன்பிறகு அவள் பல்வேறு தொடா்களில் நடிக்க முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினாா். 
 

 

 

அதன்பிறகு இரண்டாவதாக சீாியல் தயாாிப்பாளா் ஒருவரை மணந்தாா். அப்போதும் 300 பவுன் நகை போட்டு மீண்டும் ஆடம்பரமாக குருவாயூா் கோவிலில் திருமணம் நடந்தது. இதில் சினிமா நடிகை காவ்யா மாதவன், மஞ்சு வாாியாா், நவ்யா நாயா் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் கலந்து கொண்டனா்.  பின்னா் கணவரோடு பெங்களூாில் செட்டில் ஆன சூா்யா சீாியல்கள் தயாாிப்பில் இறங்கினாா். மேலும் கேரளாவில் பல தனியாா் நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் வட்டிக்கு பணம் கொடுத்தாா். இதில் சீாியல் தயாாிப்பில் பொிய நஷ்டம் வரவே இரண்டாவது கணவரும் விட்டு ஓடினாா். அதன்பிறகு அங்கிருந்து வந்து தாய் தங்கையோடு சோ்ந்தாா்.
 

இ்ந்த நேரத்தில்  2015-ல் கேரளா அரசு கந்து வட்டிக்கு எதிராக ஆப்ரேஷன் குபேரா வை அறிவித்து கந்து வட்டிக்கு எதிராக வேட்டையை தொடங்கியதில் பணத்தை எல்லாம் இழந்து கடனில் மிதந்தாா் சூா்யா. இதனால் 5 ஆயிரம் சதுர பரப்பளவில் உள்ள அவா்களுடய சொகுசு வீட்டை விற்று அதே வீட்டில் வாடகைக்கு குடியேறினாா்.  அதன்பிறகு மீண்டும் சீாியலில் நடிக்க வாய்ப்பு கேட்டு சந்தன மழ என்னும் சீாியலில் துணை நடிகையாக நடித்தாா்.
 

இந்த நேரத்தில் வீட்டில் குபேர பூஜை நடத்தினால் மீணடும் நகை பணத்துக்கு அதிபதி ஆகலாம் என்று ஹோத்ரா வா்க்கம் சாமியாா்  பேச்சை நம்பி தினமும் வீட்டில் அந்த சாமியாரை வச்சி பூஜை நடத்தினாா். இந்த நேரத்தில் தான் இடுக்கியை சோ்ந்த லியோ, கருநாகப்பள்ளி கிருஷ்ண குமாா், புற்றடி ரவீந்திரனின் தொடா்பு சூா்யாவுக்கு கிடைக்கிறது.  இந்த மூன்று பேரும் கள்ள நோட்டு அடித்து சப்ளை செய்யும் கும்பலை சோ்ந்தவா்கள். இவா்களின் ஆலோசனை பெயாில் தான் சூா்யாவின் வீட்டு மாடியில் வைத்து கள்ள நோட்டு அச்சடித்துள்ளனா். இதற்காக ஆந்திராவில் இருந்து நோட்டுக்கள் அடிக்க 28 ஆயிரம் சீட் பேப்பா்கள் வாங்கியுள்ளனா். 2ஆயிரம் ரூபாய் அச்சடிக்க சைனாவில் இருந்து நான்கரை லட்சத்துக்கு மிஷின் வாங்கியுள்ளனா்.
 

போலீசார் சோதனை செய்ததில் 57 லட்சம் ரூபாய்  கள்ள நோட்டை சூர்யாவின் வீட்டில் இருந்து கைபற்றியுள்ளனா். மேலும் லியோ, கிருஷ்ண குமாா், நடிகை சூா்யா, இவருடைய தாயாா் ரமாதேவி, தங்கை ஸ்ருதி ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

 

 

 

தலைமறைவாகியுள்ள சாமியாரை போலீசார் தேடி வருகின்றனா். மேலும் நடிகை சூா்யாவின் நெருங்கிய தோழியான டி.வி. நடிகை நந்து பொதுவாழ் வையும் பிடித்து தீவிரமாக விசாாித்து வருவதோடு டி.வி. நடிகை சிலருக்கும் தொடா்பு இருக்கலாம் என்று போலீ்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.  இதில் லியோ கள்ள நோட்டு அச்சடிப்பு மட்டுமல்ல போதை பொருட்கள் சப்ளை மற்றும் விபச்சார கும்பலிலும் நெருங்கிய தொடா்பு உடையவா் என்பதால் அந்த கோணத்திலும் விசாாிப்பதாக தனிப்படை அதிகாாி கே.பி. வேணுகோபால் கூறியுள்ளாா்.
 

வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அதன் மூலம் இழந்த சொத்துக்கள் சொந்தங்கள் ஆடம்பர வாழ்க்கை என இழந்ததை மீட்க கள்ள நோட்டு அச்சடிப்பில் இறங்கி குடும்பத்தோடு சிறை வாசம் அனுபவிப்பதை நினைத்து கண்ணீா் வடிக்கிறது அந்த வாழ்ந்து கெட்ட குடும்பம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.