Skip to main content

திருட்டை கண்டுபிடிக்க வந்த முக்காலி... ஆச்சர்யத்துடன் குவிந்த கிராம மக்கள்!

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

The tripod that came to find the theft... the villagers gathered!

 

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள சன்னாசியார் கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை உட்பட பல மாவட்டங்களிலும் இந்த சன்னாசியாரை குலதெய்வமாக வணங்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். பொதுமக்களின் பங்களிப்புடன் வனப்பகுதியில் உள்ள சன்னாசியார் கோவில் மரங்களுக்கு சேதமின்றி திருப்பணிகள் முடிந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

 

குடமுழுக்கு நடந்த சிலநாட்களில் கோவில் உள்ளே இருந்த இரும்பு உண்டியல் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்கள் காணிக்கையாக போட்ட பணம் காணாமல் போயிருந்தது. 2 பூட்டுகளும் அதிக சேதாரமின்றி உடைந்து கிடந்தது. பணத்தை திருடியவர்கள் கொண்டு வந்து போடுவார்கள் என்று கோவில் நிர்வாகிகளும் அந்தப்பகுதி மக்களும் காத்திருந்தனர். ஆனால் திருட்டு போன உண்டியல் பணம் வரவில்லை. 48 நாட்கள் மண்டலாபிஷேகம் வரை காத்திருந்தும் பணம் திரும்ப வரவில்லை என்பதால் கோவில் நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் இணைந்து உண்டியல் உடைத்து திருடியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

 

The tripod that came to find the theft... the villagers gathered!

 

அந்த முடிவின்படி சிட்டங்காடு பூசாரி நடராஜன் மூலம் முக்காலியை கொண்டு வந்து திருட்டைக் கண்டுபிடிக்க முடிவெடுத்து புதிய முக்காலி வாகை மரத்தில் கொத்தமங்கலம் தச்சர் மூலம் தயாரானது. வெள்ளிக்கிழமை முக்காலி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு தனி அறையில் வைத்து இரவு பூஜைகள் செய்யப்பட்டது.சனிக்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டது. இதனைக் காண பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்திருந்தனர்.

 

இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது,இந்த உண்டியல் திருடியவர்களை முக்காலி காட்டிக் கொடுக்கும் என்று நம்புவதாக கூறினார்கள். முக்காலி இயக்கும் பூசாரி சிட்டங்காடு நடராஜன் நம்மிடம் பேசுகையில், 'இதுவரை ஏராளமான திருட்டுகளை கண்டுபிடித்து இருக்கிறோம். ராணுவ வீரர்களுக்கு சம்பளம் போட வைத்திருந்த பணம் திருடு போனதைக் கூட நான் இயக்கிய முக்காலி தான் கண்டுபிடித்தது. போலீஸ் வீட்ல திருடியதை கண்டுபிடிச்சு கொடுத்தேன். அதேபோல உண்டியல் திருட்டையும் கண்டுபிடிக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.