Skip to main content

கருப்பு காகித்தை 2000 ரூபாய் நோட்டாக மாற்றும் வித்தை...! மோசடி நபர் கைது!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

The trick of converting black paper into 2000 rupee note Fraudster arrested

 

வத்தலக்குண்டு - உசிலம்பட்டி சாலையில், வத்தலக்குண்டு சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது உசிலம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த காரை சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக கருப்புத் தாள்களும் பிளாஸ்டிக் பேரல் ஒன்றும் இருந்துள்ளன. காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீஸார் காரில் இருந்த பிளாஸ்டிக் பேரலைத் திறந்து பார்த்தபோது, அதில் சில 2000 ரூபாய் நோட்டுகள் மிதந்துகொண்டிருந்தன.

 

மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, அந்த நபர் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த நல்லமலை என தெரியவந்தது. நல்லமலையிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தான் வைத்துள்ள கருப்பு காகிதத்தைத் தானே தயாரித்த திரவத்தில் நனைத்து எடுத்தால், அது இரண்டாயிரம் ரூபாய் நோட்டாக மாறும் என தன்னிடம் ஏமாறும் நபர்களை நல்லமலை நம்ப வைத்துள்ளார். நம்பும் விதமாக ஏற்கனவே அந்தத் திரவ பேரலில் ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுகளைப் போட்டு வைத்து விடுவானாம். தன்னை நம்பி வருபவரிடம் கருப்பு காகிதத்தைத் திரவத்தில் மூழ்கி எடுப்பது போல் உள்ளே விட்டுவிட்டு, ஏற்கனவே தான் போட்டு வைத்திருந்த ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டை எடுத்து கையில் கொடுத்து விடுவானாம்.

 

The trick of converting black paper into 2000 rupee note Fraudster arrested

 

பின்னர் அந்தக் கருப்பு காகித நோட்டுகளையும், திரவத்தையும் வாங்க பேரம் தொடங்கிவிடும். தற்போது இவன் பேச்சை நம்பி ஏமாற தயாராக இருந்த ஒரு நபருக்கு கருப்புக் காகிதத்தைக் கொண்டு செல்லும் வழியில்தான் வத்தலக்குண்டு போலீசாரிடம் நல்லமலை சிக்கிக்கொண்டார். கட்டுக்கட்டாக கருப்பு காகித நோட்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அவன் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். நல்லமலை மீது தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. நல்லமலையை கைது செய்த போலீஸார் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.