Skip to main content

87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி! சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

Trichy Ramakrishna theater demolish

 

திருச்சியில் எத்தனையோ பழமையான இடங்கள் இருந்தாலும் பொழுதுபோக்கு என்று வரும்போது அன்றைய காலகட்டங்களில் நினைவுக்கு வருவது டூரிங் டாக்கிஸ்தான். அதிலும் காலணா, எட்டணா, அரையணா, என்று காசு கொடுத்து பல நடிகர்களை அமர்ந்து ரசித்துக் கொண்டாடிய சினிமா கொட்டகைகள் பல அழிந்துவிட்டன. 

 

அதன் வரிசையில் கடந்த 1934ம் ஆண்டு திருச்சியில் கட்டப்பட்ட ராமகிருஷ்ணா தியேட்டர் இன்று 87 ஆண்டுகளை நிறைவு செய்தது. அதேசமயம் அது தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. இந்த தியேட்டரின் உரிமையாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “1934ஆம் ஆண்டுகளில் பொழுது போக்கிற்காக என்னுடைய தந்தை குழந்தைவேல் கட்டினார். அதிலும், அந்தக் காலகட்டத்தில் மேட்டூர் அணை கட்டி நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் மிஞ்சிய பொருட்களை அங்கு இருந்து திருச்சிக்கு எடுத்துவந்து இந்த தியேட்டரை கட்டினார். 

 

திரை கட்டி 10,000 அடி 11,000 அடி நீளமுள்ள ஃபிலிம் ரோல்களைக் கொண்டு பலரை ரசிக்கவைத்து பலருக்கு சினிமா ஆவலை தூண்டி பல காவியங்களைப் படைத்த திரைப்படங்களை அடித்தட்டு மக்களும், கூலித் தொழிலாளிகளும் காணவேண்டும் என்பதற்காக இந்தப் பொழுதுபோக்குத் திரையரங்கை அவர் வடிவமைத்தார். இன்று, எத்தனையோ நவீனத் திரையரங்குகள் மல்டிபிளக்ஸ் என்று சொல்லக்கூடிய திரையரங்குகள் எல்லாம் பெருகிப் போயிருந்தாலும், அவர்களால் 200 ரூபாய் 300 ரூபாய் என்று பணம் செலவு செய்து திரைப்படங்களைப் பார்க்க முடியாது. 

 

அன்று முதல் இன்று வரை எங்களுடைய தியேட்டரில் 25 ரூபாய்க்கு மேல் டிக்கெட் வசூல் செய்தது இல்லை. அதிலும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் அதிகபட்சமாக 50 ரூபாய் வரை நாங்கள் வசூல் செய்திருக்கிறோம். ஆனால், கடந்த ஆண்டு துவங்கி அந்த கரோனா நோய்ப் பாதிப்பால் திரையரங்குகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஒரு வருட காலம் முழுமையாக திரையரங்கு முடங்கியிருந்த நிலையில், அதைப் பராமரிக்க முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தோம். 

 

cnc

 

மீண்டும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் செயல்படலாம் என்று கூறியபோது அவற்றை மீண்டும் பராமரிப்பு செய்து செயல்பாட்டுக்குக் கொண்டு வந்த நிலையில், இரண்டாவது அலை விச ஆரம்பித்துள்ளதால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

 

இந்த திரையரங்கு சுமார் 500 இருக்கைகள் உள்ள நிலையில், ஒருவேளை திரையரங்கு இயக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், 350 பேர் மட்டுமே அமரக்கூடிய அளவில் இருக்கும். எனவே அது மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் திரையரங்கை முழுமையாக இடித்துவிடலாம் என்று முடிவு செய்து அதற்கான பணியை தற்போது துவங்கி உள்ளோம்” என்றார் வேதனையுடன்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.