Skip to main content

அறிவிப்பை மீறிய வாகன ஓட்டிகள்... வாகன பறிமுதலில் இறங்கிய திருச்சி போலீஸார்!.

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

Trichy police seize vehicle

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. இருந்தும் வாகன ஓட்டிகள் வீட்டுக்குள் முடங்காமல் மீண்டும் பல்வேறு காரணங்களை காட்டி நகரப்பகுதிகளில் சுற்றித்திரிய ஆரம்பித்துள்ளனர்.

 

திருச்சி நகரப் பகுதி முழுவதும் சாலைகள் அடைக்கப்பட்டு ஒரு வழிப்பாதையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. காவல்துறையும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்தாலும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை இன்றுவரை குறையாமல் உள்ளது.

 

காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர வேண்டிய வாகன ஓட்டிகள், குறிப்பிட்ட நேரத்தையும் கடந்து அதிக அளவில் வெளியே சுற்றித் திரிவதால் திருச்சியில் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வர ஆரம்பித்துள்ளது. பலரும் மருத்துவமனைக்கு செல்வதாகவும் மருந்துகள் வாங்க செல்வதாகவும் பல்வேறு காரணங்களை முன்வைத்தாலும் பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

 

Trichy police seize vehicle

 

இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா தொற்றால் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டபோது அத்துமீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அவர்களுடைய வண்டிகளை அவர்களுடைய அபராத தொகையை பெற்றுக்கொண்டு திருப்பிக் கொடுத்து வந்தனர். தற்போதும் காவல்துறை தன்னுடைய கடமையை செய்ய ஆரம்பித்து இன்று முதல் காரணமில்லாமல் வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பை செயல்படுத்தி உள்ளது.

 

ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பத்து வண்டிகள் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் வாகனங்களை பறிமுதல் செய்ய ஆரம்பித்துள்ளனர் போலீஸார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.