Skip to main content

திரைப்பட இயக்குநர் உள்ளிட்ட 1,300 போ் மீது வழக்கு!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் பெரிய எழுச்சியோடு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் முழுவதும் வண்ணாராப்பேட்டை சம்பவத்திற்கு பிறகு முஸ்லீம் பெண்கள் தொடர்ச்சியாக பொது இடங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

trichy caa meeting film director includes 1300 fir filed

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இச்சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசியக் குடியுரிமைப் பதிவேடு பணிகளைத் தொடங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
 

திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் இஸ்லாமியா்கள் 16- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

trichy caa meeting film director includes 1300 fir filed

இந்த நிலையில் மக்கள் அதிகாரம் சார்பில் 'அஞ்சாதே போராடு' என்கிற பிரமாண்டமான பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பின் மாநில பொருளாளர் காளிப்பன், திரைப்பட இயக்குநர் லெனின்பாரதி, தமிழ்தேசிய விடுதலை இயக்க பொது செயலாளர் தியாகு, உள்ளிட்ட 1,000 போ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
 

இதே போன்று தில்லைநகா் 80 அடி சாலையில் குடியரிமை திருத்தச் சட்ட உறுதி மொழி போராட்டம் நடத்திய மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் செழியன் 50 போ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் போராட்டம் நடத்திய திருச்சி ஜாமல் முகமது கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் மாணவர் சங்க நிர்வாகி சுரேஷ் மற்றும் பிரதீப் உள்ளிட்ட 250 மாணவா்கள் என 1,300 போ் மீது தில்லைநகா், கே.கே.நகா் காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்துள்ளனா்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.