14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துதொழிலாளர்களுடன்பேச்சுவார்த்தைநடத்த தொழிலாளர் நல ஆணையம்அழைப்புவிடுத்திருந்தது.
இன்று மதியம்தொழிலாளர் நலத்துறைஇணைஆணையர் லட்சுமி காந்தன்தலைமையில்தொடங்கி நடைபெற்றபேச்சுவார்த்தையில் ஊதியஒப்பந்த பேச்சுவாரத்தைதொடர வேண்டும் என்ற கோரிக்கைஏற்கப்பட்டதால், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும்தகவல்கள்வெளியாகியுள்ளன.