Skip to main content

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் சேவை ரத்து

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

train service between Chennai Beach and Tambaram has been cancelled

 

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில், “சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் வழித்தடத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இரவு நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் இன்று (03.10.2023) முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில் இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

 

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை என மொத்தம் 4 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கரையைக் கடந்த ‘மிக்ஜாம்’ புயல்

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Storm Migjam crossed the coast

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது.

 

நேற்று முற்பகல் சென்னையிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயலானது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், சென்னையை விட்டு விலகி 200 கிலோமீட்டர் தொலைவிற்குச் சென்றது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து புயல் விலகிச் சென்றதால் சென்னையில்  மழை வெகுவாகக் குறைந்தது.

 

இந்நிலையில் தெற்கு ஆந்திரா கடற்கரையை  ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பாம்பு, விஷ பூச்சிகளை பிடிக்க பிரத்யேக எண்கள் அறிவிப்பு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Notification of special numbers for catching snake venomous insects

 

                                                       கோப்புப்படம் 

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

மழை வெள்ளத்தில் பாம்பு, விஷப்பூச்சிகள் பாதிப்புகள் இருந்தால் அவற்றை பிடிப்பதற்கான எண்கள் வழங்கப்பட்டுள்ளது. போரூர், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, நெற்குன்றம், கோயம்பேடு பகுதிகளில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு பாபா (98 41 58 88 52) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம், பெரம்பூர் பகுதிகளுக்கு சக்தி (90 94 32 13 93) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  அண்ணா நகர் முதல் பட்டாபிராம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு கணேசன் (74 48 92 72 27) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ஜெய்சன் (80 56 20 48 21) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு ராபின் (88 07 87 06 10) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, மணிகண்டன் (98 40 34 66 31) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ரவி (96001190810) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்