Skip to main content

பிறந்தநாள் கொண்டாட முடியாததால் தற்கொலை!-மருத்துவ மாணவரின் சோக முடிவு!

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

The tragic end of a medical student-Virudhunagar Incident

 

சில தற்கொலைகளுக்கான காரணம் வியப்பாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கும். அப்படியொரு சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ஆனந்தராஜ்,  லோரா மருத்துவமனை மற்றும் சொர்ணலட்சுமி மருந்துக்கடை நடத்திவருகிறார். தனது மகன் லோகேஷ், MBBS டாக்டராக வேண்டுமென்று கிர்கிஸ்தானுக்கு அனுப்பி, அங்குள்ள ஜாலாலாபாத் பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்துள்ளார். அங்கு மூன்றாமாண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த லோகேஷ், விடுமுறையைக் கழிப்பதற்காக ஜூன் மாத கடைசியில் விருதுநகர் வந்துள்ளார். வழக்கம்போல்,  தனது பிறந்தநாளை (ஆகஸ்ட் 11-ஆம் தேதி) சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று லோகேஷ் கேட்க, அவருடைய அம்மா “சிம்பிளாகக் கொண்டாடினால் போதும்..’' என்று கூறியிருக்கிறார்.

 

பிறந்தநாள் கொண்டாட்டத்தை பெரிதும் எதிர்பார்த்த லோகேஷுக்கு அம்மா மறுத்துப் பேசியது மன உளைச்சலைத் தந்துள்ளது. 9-ஆம் தேதி இரவு மயக்கமாக இருக்கிறது எனக்கூறி, அல்புரோ சோலம் என்ற மாத்திரை அட்டையை, அவர்களது மருந்துக்கடையிலிருந்து எடுத்துள்ளார். அதன்பிறகு, ஒரு மாதிரியாக தலைவலியும் கிறுகிறுப்புமாக இருக்கிறது என்று லோரா மருத்துவமனையில் இருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். உடனே அவர்கள், லோகேஷின் சட்டைப் பையைப் பார்த்துள்ளனர்.  மொத்த மாத்திரை அட்டையும் காலியாக இருந்துள்ளது. அந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, லோகேஷை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை சென்று  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல், 10-ஆம் தேதி அதிகாலை 4-45 மணிக்கு லோகேஸ் இறந்துவிட்டார்.

 

ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை, குற்றவியல் நடைமுறைச் சட்டப்  பிரிவு 174-ன் கீழ் சந்தேக மரணம் எனப் பதிவு செய்திருக்கிறது, விருதுநகர் மேற்கு காவல்நிலையம். மருத்துவம் படித்து வந்த மாணவர் லோகேஷுக்கு உயிரின் மதிப்பு தெரியாமல் போனது கொடுமைதான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.