Skip to main content

ஆன்லைன் லாட்டரியால் நேர்ந்த சோகம்! வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட நூல் வியாபாரி! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

The tragedy of the online lottery! The thread dealer who posted the video and passed away

 

அரசும், அரசுத் துறை நிர்வாகமும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினாலும் சட்டத்திற்கு புறம்பான சில செயல்பாடுகள் தொடர்ந்து ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் சூதாட்டமும், லாட்டரி விற்பனையும்.

 

ஈரோட்டை சேர்ந்த நூல் வியாபாரி ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரியால் லட்சக்கணக்கில் பணம் இழந்ததாக வீடியோவில் பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஒராண்டுக்கு முன்பே ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக சசிமோகன் வந்த பிறகு லாட்டரி சீட்டை ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். பல ஊர்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 215 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

 

இப்படி எஸ்.பி. மிகவும் கறாராக இது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் ஒரு சில இடங்களில் மறைமுகமாக லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த லாட்டரி விற்பனையை தடுக்க, ரகசிய தகவலை சேகரிக்க, வாட்ஸ்அப் குழுக்களை ஊடுருவி தகவலை சேகரிக்க தனியாக காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

 

இந்நிலையில் தான்  ஈரோட்டைச் சேர்ந்த நூல் வியாபாரி ஆன்லைன் லாட்டரி சீட்டில் ரூபாய் 62 லட்சத்தை இழந்து விட்டதாகவும் அதனால் ஏற்பட்ட வேதனையால்  வீடியோ பதிவிட்டு  வாட்ஸ்-அப்பில் பரப்பிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு எல்லப்பாளையம், முல்லை நகரைச் சேர்ந்தவர் 54 வயது  ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகளின் கணவர் இறந்ததால், தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் குமாரபாளையத்தில் உள்ள கணவருடன் வசித்து வருகிறார்.  


ராதாகிருஷ்ணன் முதலில் சொந்தமாக தறிப்பட்டறை நடத்தி வந்தார். அந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் கமிஷன் ஏஜென்டாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில்தான் ராதாகிருஷ்ணன் 13ந் தேதி மாலை "நான் ஆன்லைன் லாட்டரி சீட்டை நம்பி ரூ. 62 லட்சம் வரை இழந்துவிட்டேன். இனிமேலும் உயிருடன் இருந்தால் அதற்கு மேலும் அடிமையாகி விடுவேன். அதனால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று வீடியோவில் பதிவிட்டுவிட்டு ராதாகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

 

The tragedy of the online lottery! The thread dealer who posted the video and passed away

 

இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் 62 லட்சத்தை எந்த காலகட்டத்தில் எவ்வாறு இழந்தார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இப்போது முதல் கட்ட விசாரனை நடை பெற்று வருகிறது. தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? தற்கொலைக்கு தூண்டிய நபர் யார் என்பதை புலன் விசாரணை செய்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் எவ்வித சட்டவிரோத செயல்களுக்கும் இடமில்லை. மிக கடுமையான நடவடிக்கையும் தொடர் கண்காணிப்பையும் செய்து வருகிறோம். அரசு உத்தரவுப்படி குற்றச் செயலில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியாக கூறினார் மாவட்ட எஸ்.பி. சசிமோகன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.