Skip to main content

மர்மமாக மரணிக்கும் கால்நடைகள்... பயத்தில் பொதுமக்கள்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

Tiruppattur incident - Cattle

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 சதவீத ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் எந்தவித கடைகளும் திறக்கப்படவில்லை, மீறி திறக்கப்படும் கடைகளுக்கு வருவாய்த்துறை சீல் வைக்கும் பணியை செய்கின்றது. இதனால் பொதுமக்கள் மிரட்சியில் உள்ளனர். இந்நிலையில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் கால்நடைகள் அடுத்தடுத்து இறக்கின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


ஏப்ரல் 28ந்தேதி வாணியம்பாடி பகுதியில் 2 கால்நடைகள் இறந்துள்ளன. அதனை தொடர்ந்து ஏப்ரல் 29ந்தேதி காலை ஆம்பூர் அடுத்த கரும்பூர், வீராங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அடுத்தடுத்து திடீரென 5 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அடுத்தடுத்த நாட்களில் கால்நடைகள் திடீரென இறந்தது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கால்நடைகளுக்கும் கரோனா தொற்றுநோயா? அல்லது வேறு ஏதாவது நோயா எனத்தெரியாமல் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்பூரில் மத்திய உளவுத்துறையால் இளைஞர் கைது! 

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

Youth Arrested by Central Intelligence Agency in Ampur!

 

தடைச் செயயப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அனாசலி என்ற கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுத்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுமார் 15 மணி நேரம் விசாரணை செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, அவற்றையும் சோதனை செய்தனர். இதையடுத்து, தடைச் செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி மாணவர் அனாசலியை கைது செய்தனர். 

 

ஆம்பூரில் முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொலை செய்வதற்கும், வெடிக்குண்டு தாக்குதலுக்கும் திட்டம் தீட்டியதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. கல்லூரி அனாசலி மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். 

 

Next Story

கொள்ளிடம் ஆற்றில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Cattle cart workers engaged in a waiting struggle on the Kollidam river

 

திருச்சி மாவட்டம் மாதவ பெருமாள் கோவில் மற்றும் தாளக்குடி மணல் குவாரிகளை நம்பி 2,408 மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் பிழைப்பை நடத்திவந்தனர். இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மணல் குவாரிகள் இயங்க அரசு தடை விதித்தது. மாட்டுவண்டி மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க அரசு காலதாமதப்படுத்தி வருவதால் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என கூறி பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். 

 

இதுவரை தமிழ்நாடு அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில், இன்று (30.09.2021) மூடப்பட்டுள்ள குவாரிகளில் மணல் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 600க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்து லால்குடி வட்டாட்சியர் சித்ரா, லால்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீத்தாராமன் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தாளக்குடி மற்றும் மாதவ பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரிகளைத் திறக்க அனுமதி வழங்கும்வரை இந்த இடத்தைவிட்டு கலைந்து செல்லப் போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.