Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

tirunelveli thalaiyuthu youngester velliyappan incident

 

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சி குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வெள்ளியப்பன் (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் மும்பையில் வசித்து வந்திருக்கிறார். சொந்த ஊரில் இசக்கியம்மன் கோவில் கொடை விழா நடைபெறுவதால் அதற்காக குறிச்சி குளம் வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து தாழையூத்து சென்றுவிட்டு தனது பைக்கில் ஊர் திரும்பியிருக்கிறார். அப்போது குறிச்சிகுளம் நான்கு வழிச்சாலை வழியாக வரும்போது செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது.  பைக்கை ஓரமாக நிறுத்திய வெள்ளியப்பன் செல்போனில்  பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

 

அங்கு திடீரென்று வந்த கும்பல் ஒன்று அவரை சூழ்ந்து கொண்டு அரிவாளால் தலையின் பல பகுதிகளில் தாக்கி உள்ளனர். இதனால் அலறிக்கொண்டே ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே வெள்ளியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாழையூத்து டி.எஸ்.பி ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

தீவிர விசாரணையை மேற்கொண்ட போலீசார், வெள்ளியப்பனுக்கும் நெல்லைப் பகுதியில் திருமணமான பெண் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை மும்பைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் வெள்ளியப்பன்; இதனால் பெண்ணின் உறவினர்களுக்கும் வெள்ளியப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்திருக்கிறது. அதனடிப்படையில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

 

இதையடுத்து சம்பவம் தொடர்பாக மணிகண்டன், நாகராஜன், பெண்ணின் தந்தையான மூக்கன் மற்றும் தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏழு பேரை பிடித்து போலீசார் அவர்களிடம் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.