Skip to main content

“இந்த முறை கட்டாயம் ஜீவசமாதி அடையப்போகிறேன்..” பாசங்கரை இருளப்பசாமி  

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

"This time I am going to reach the tomb of compulsion."

 

2019-செப்டம்பர் 12ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் பாசங்கரை சாமியார் பார்க்க கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். சிவகங்கை மாவட்டமே பரபரப்பாக இருந்தது. நான் ஜீவசமாதி அடையப்போகிறேன் என போஸ்டரைப் பார்த்த மக்கள் பாசாங்கரை சாமியாரை பார்க்க உணவுப் பொருட்கள், பணம், நகைகளுடன் வண்டி கட்டி வந்தனர். அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உட்பட பலரும் அருள் ஆசிபெற்றனர். ஆனால் அவர் ஜீவசமாதி அடையாமால் தவிர்த்தது, பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருளப்பசாமியின் மகன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருளப்பசாமி மீண்டும் ஜீவசமாதி அடைய உள்ளேன் என தெரிவித்துள்ளது. சிவகங்கையில் சூட்டை கிளப்பியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை அடுத்த பாசங்கரை பகுதியைச் சேர்ந்தவர் தான் இருளப்பசாமி. சிறுவயதில் இருந்தே சிவன் மீது பற்று கொண்டு சிவபெருமானை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. வீடு, விவசாயம் நிலங்கள், குடும்பம் என அனைத்தும் இருந்தாலும் சிவபெருமானின் மீது உள்ள பற்றால் தன்னை சாமியாரக அறிவித்துக் கொண்டு சிவ பூஜை செய்து வந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக உடல் நிலை கோளாறு ஏற்படவே வீட்டில் படுத்த படுக்கையாகிவிட்டாராம். 


இந்த சூழலில் இரவு உறக்கத்தில் கனவு ஏற்பட்டு சிவபெருமான் "உன்னை முழுமையாக அற்பணித்துக் கொள்" என கூறியதகாக இருளப்பசாமி தெரிவித்தார். இதனால் 2019 செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் ஜீவசமாதி அடைந்துடவேண்டும் எனவும் தெரிவித்தாக கூறி இருளப்பசாமி ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் 2019- செப்டம்பர் மாதம் துவக்கத்திலேயே பக்தர்கள் கூட்டம் எண்ணில் அடங்காமல் குவிந்தது. பக்தர்கள் பழங்கள் உணவுப் பொருட்கள், பணம், ஆபரணங்கள் என ஏகப்பட்ட பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். 


அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் நேரில் வந்து ஆசிபெற்றார். ஜீவசமாதி அடையப்போகிறேன். என்று கூறிய தேதியன்று இருளப்பன் ஜீவசமாதி அடையவில்லை. இதனால் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். இது தொடர்பாக இருளப்பசாமியின் மகன் உட்பட, அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பாசாங்கரை இருளப்பசாமி  2 வருடங்களுக்கு பின் என்ன செய்கிறார் என தெரிந்துகொள்ள அவரின் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்தோம்.


நம்மிடம் பேசுகையில்.., "கடந்த முறை ஜீவசமாதி ஏற்கும் போது கேரள மாந்திரிகர் சிலர் அதனை தடுவிட்டனர் அதனால் என்னால் ஜீவசமாதி அடையமுடியவில்லை. தற்போது வரும் சித்திரா பெளர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்துவிடுவேன். வரும் சித்திரை ஒன்று வியாழன், வெள்ளி, சனிக்கிழமை மூன்று நாட்களுக்குள் கண்டிப்பாக ஜீவசமாதி அடைவேன். கடந்த முறை சொன்னது போல நல்ல மழை பொழிவு ஏற்பட்டு விவசாயம் செழித்துள்ளது. அதே போல் கரோனா என்ற நோயும் ஏற்பட்டுள்ளது. நான் ஜீவசமாதி அடைந்த பின் இவை முற்றிலுமாக நீங்கும். நான் ஜீவசமாதி அடைந்த இடத்தில் வேண்டுதல் செய்தால் நிறைவேறும். குழந்தை பாக்கியம், உடல் சுகம் என அனைத்தும் கிடைக்கும்" என்றார்.

கடந்த முறை போஸ்டர் ஒட்டி ஜீவசமாதி அடையப்போகிறேன் என இருளப்பசாமி தெரிவித்திருந்த நிலையில் அதனை கைவிட்டார். இந்நிலையில் மீண்டும் ஜீவசமாதி அடையப்போகிறேன் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.