Skip to main content

“இந்த முறை கட்டாயம் ஜீவசமாதி அடையப்போகிறேன்..” பாசங்கரை இருளப்பசாமி  

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

"This time I am going to reach the tomb of compulsion."

 

2019-செப்டம்பர் 12ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் பாசங்கரை சாமியார் பார்க்க கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். சிவகங்கை மாவட்டமே பரபரப்பாக இருந்தது. நான் ஜீவசமாதி அடையப்போகிறேன் என போஸ்டரைப் பார்த்த மக்கள் பாசாங்கரை சாமியாரை பார்க்க உணவுப் பொருட்கள், பணம், நகைகளுடன் வண்டி கட்டி வந்தனர். அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உட்பட பலரும் அருள் ஆசிபெற்றனர். ஆனால் அவர் ஜீவசமாதி அடையாமால் தவிர்த்தது, பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருளப்பசாமியின் மகன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருளப்பசாமி மீண்டும் ஜீவசமாதி அடைய உள்ளேன் என தெரிவித்துள்ளது. சிவகங்கையில் சூட்டை கிளப்பியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை அடுத்த பாசங்கரை பகுதியைச் சேர்ந்தவர் தான் இருளப்பசாமி. சிறுவயதில் இருந்தே சிவன் மீது பற்று கொண்டு சிவபெருமானை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. வீடு, விவசாயம் நிலங்கள், குடும்பம் என அனைத்தும் இருந்தாலும் சிவபெருமானின் மீது உள்ள பற்றால் தன்னை சாமியாரக அறிவித்துக் கொண்டு சிவ பூஜை செய்து வந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக உடல் நிலை கோளாறு ஏற்படவே வீட்டில் படுத்த படுக்கையாகிவிட்டாராம். 


இந்த சூழலில் இரவு உறக்கத்தில் கனவு ஏற்பட்டு சிவபெருமான் "உன்னை முழுமையாக அற்பணித்துக் கொள்" என கூறியதகாக இருளப்பசாமி தெரிவித்தார். இதனால் 2019 செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் ஜீவசமாதி அடைந்துடவேண்டும் எனவும் தெரிவித்தாக கூறி இருளப்பசாமி ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் 2019- செப்டம்பர் மாதம் துவக்கத்திலேயே பக்தர்கள் கூட்டம் எண்ணில் அடங்காமல் குவிந்தது. பக்தர்கள் பழங்கள் உணவுப் பொருட்கள், பணம், ஆபரணங்கள் என ஏகப்பட்ட பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். 


அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் நேரில் வந்து ஆசிபெற்றார். ஜீவசமாதி அடையப்போகிறேன். என்று கூறிய தேதியன்று இருளப்பன் ஜீவசமாதி அடையவில்லை. இதனால் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். இது தொடர்பாக இருளப்பசாமியின் மகன் உட்பட, அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பாசாங்கரை இருளப்பசாமி  2 வருடங்களுக்கு பின் என்ன செய்கிறார் என தெரிந்துகொள்ள அவரின் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்தோம்.


நம்மிடம் பேசுகையில்.., "கடந்த முறை ஜீவசமாதி ஏற்கும் போது கேரள மாந்திரிகர் சிலர் அதனை தடுவிட்டனர் அதனால் என்னால் ஜீவசமாதி அடையமுடியவில்லை. தற்போது வரும் சித்திரா பெளர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்துவிடுவேன். வரும் சித்திரை ஒன்று வியாழன், வெள்ளி, சனிக்கிழமை மூன்று நாட்களுக்குள் கண்டிப்பாக ஜீவசமாதி அடைவேன். கடந்த முறை சொன்னது போல நல்ல மழை பொழிவு ஏற்பட்டு விவசாயம் செழித்துள்ளது. அதே போல் கரோனா என்ற நோயும் ஏற்பட்டுள்ளது. நான் ஜீவசமாதி அடைந்த பின் இவை முற்றிலுமாக நீங்கும். நான் ஜீவசமாதி அடைந்த இடத்தில் வேண்டுதல் செய்தால் நிறைவேறும். குழந்தை பாக்கியம், உடல் சுகம் என அனைத்தும் கிடைக்கும்" என்றார்.

கடந்த முறை போஸ்டர் ஒட்டி ஜீவசமாதி அடையப்போகிறேன் என இருளப்பசாமி தெரிவித்திருந்த நிலையில் அதனை கைவிட்டார். இந்நிலையில் மீண்டும் ஜீவசமாதி அடையப்போகிறேன் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.