Skip to main content

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் தற்கொலை! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Three members of the same family passes away

 

கடன் தொல்லையால் மகனைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, பெற்றோரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சையில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சை அடுத்துள்ள மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தார். அதோடு தஞ்சை பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சொந்தமாக டீக்கடையும் நடத்திவந்தார். இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் என்கிற பதினோரு வயது மகன், தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்துவந்தார்.

 

இந்நிலையில், தொழில் சம்பந்தமாக கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் கடன் வாங்கியிருக்கிறார். வட்டிமேல் வட்டியோடு, கொடுத்தவர்கள் அதிக நெருக்கடி கொடுத்ததால் ராஜா மனமுடைந்து, தனது குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதனிடையே நேற்றிரவு (05.12.2021) கனகதுர்கா, தனது தம்பிக்கு ‘நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம்’ என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

 

காலையில் தனது அக்கா அனுப்பிய தகவலைப் பார்த்த தம்பி அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகன் படுக்கையில் உயிரிழந்த நிலையிலும், ராஜாவும், கனகதுர்காவும் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உடைந்துபோனார். பிறகு கள்ளபெரம்பூர் காவல்துறையினருக்குத் தகவல் கூறினர். அங்கு வந்த காவல்துறையினர், மூவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ராஜா கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.