Skip to main content

சுதந்திர தின அமுதப் பெருவிழா - ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு! 

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Thousands of students participate in the Independence Day Elixir Festival!

 

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளின் வரலாற்றையும் அவர்களை நினைவு கூறும் வகையிலும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் 7 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி நேற்று (வியாழன்) நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி மைதானத்தில் தொடங்கியது.


முதல் நாள் விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களை திறந்து வைத்து அதை மாணவ மாணவிகளின் பார்வைக்கு விடப்பட்டது. மேலும் சமூக நலத்துறை, மகளீர் சுய உதவிக்குழு, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வைக்கபட்ட படைப்புகளை மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பரதநாட்டியம், பறை இசை நடனம், மல்லர் கம்பம், போன்றவை நடந்தது. மேலும் மழளையர் பள்ளி குழந்தைகள் தேசத் தலைவர்களின் வேடங்களை அணிந்து அசத்தினார்கள்.


இதில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்றும் அதன் தீமைகள் குறித்தும் பேசினார். மாணவா்கள் கல்வியை முன் வைத்து சாதனைகளை படைக்க வேண்டும் என்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசினார்.


இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக இன்று (வெள்ளி) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஆனந்தராஜ், ரம்யா முதல் இடத்தையும், அஜித், கரிஷ்மா இரண்டாம் இடத்தையும் அனிஸ்லின், நிக்சன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசுகளை வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Doctor Subbiah case High Court action verdict

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூபாய் 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

Doctor Subbiah case High Court action verdict

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து உறவினர்கள் 4 பேர், கூலிப்படையினர் 5 பேர் என மொத்தம் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி (04.08.2021) தீர்ப்பளித்தார். அதன்படி, பொன்னுசாமி, பாசில், வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்ல பிரகாஷ் ஆகிய 7 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (14.06.2024) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, 2 பேருக்கான ஆயுள் தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

Next Story

கடல் சீற்றம்; கடற்கரைக்குச் செல்ல தடை!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Furious Sea; Prohibition to go to the beach

கன்னியாகுமரியில் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக இன்றும் நாளையும் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடல் கொந்தளிப்புடன் இருக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (10.06.2024) மற்றும் நாளை (11.06.2024) ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய கடற்கரையோர மாவட்டங்களுக்கும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக் கடல் காரணமாக 3 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.