Skip to main content

‘20 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ - தமிமுன் அன்சாரி

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

Those who spent 20 years in jail should be freed says Thamimun Ansari

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கடலூர் சிறை நிரப்புப் போராட்டம், கடலூர் கெடிலம் ஆற்றுக்கரையில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தோழர் தியாகு, கடலூர் துணை மேயர் வி.சி.க, பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டத்தை கடலூர் உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. காவல்துறை கடைசி வரை அந்த இடத்தை தர மறுக்க, இறுதியாக ஆற்றுக் கரையில் நடத்த அனுமதி வழங்கியது. ஆரம்பம் முதலே போராட்டக்காரர்கள் உடன் காவல்துறையினர் கெடுபிடியுடனே நடந்து கொண்டு இருந்தனர். காவல்துறை ஆய்வாளர் கவிதா அவர்கள் சற்று வேகமாக மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை அழைக்க கட்சியின் தொண்டர்கள் காவல்துறை ஆய்வாளர் கவிதா மீது கோபப்பட ஆரம்பித்தனர். 

 

Those who spent 20 years in jail should be freed says Thamimun Ansari

 

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன், “கடந்த வாரம் நடந்த விரும்பத்தகாத ஒரு செயலால் காவல்துறையினில் இறுக்கமான நிலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஜனநாயக முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு இவ்வளவு கெடுபிடி கொடுத்து அக்கட்சியினரிடம் கெடுபிடி காட்டுவது ஏற்புடையது அல்ல என்றும், நாங்கள் ஆளும் கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் எங்களிடத்திலே காவல்துறை இவ்வளவு கெடுபிடி காட்டுவது தவறு என்றும், இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதுதான் எங்களது நோக்கமாக இருக்கும், இந்தப் போராட்டத்தில் சிறு தவறு நடந்து அதை எங்களது தலைமையிலான கூட்டணி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த விடமாட்டோம் என்று கூறி காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

மேலும் “திமுக கூட்டணிக்கு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஒற்றைக் கோரிக்கையோடு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தவர் தமிமுன் அன்சாரி. நானும் அவரும் இணைந்து சிறைவாசிகள் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளோம். தமிழக முதல்வர் ஸ்டாலின்  சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகள், இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என கேட்டுக்கொண்டார்.

 

அவரைத் தொடர்ந்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நோயாளிகளான சிறைவாசிகளின் சிகிச்சைக்குக்கூட வழியில்லாத சூழல் உருவாகியுள்ளது. நாங்கள் இஸ்லாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யச் சொல்லவில்லை. 20 ஆண்டுகள் கழித்த அனைத்து மத, சாதியினரையும் எந்தவித பாரபட்சமில்லாமல் விடுதலை செய்ய சொல்கிறோம். இந்த விடுதலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் உள்ளனர் என மேற்கொள் காட்டினார்.

 

பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தலைவர்கள் பேசியவுடன், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்ப்புலிகள் விடுதலைக்கட்சி தலைவர் குடந்தை அரசன், தோழர் வெங்கட்ராமன் மற்றும் அக்கட்சியின் மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.