Skip to main content

மீண்டும் ஒரு ஆணவக்கொலை... குடும்பமே இளம் பெண்ணை வெட்டிக் கொன்ற கொடூரம்!

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 

thoothukudi second marriage incident... police investigation

 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் சரகத்தில் வருகிற கருங்குளம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரின் முதல் மனைவி காளியம்மாள். இவர்களின் மகள் மகள் மீனா (21). தாய் காளியம்மாள் இறந்ததையடுத்து. சுடலைமுத்து முப்புடாதி என்பவரை 2 வது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் உள்ளார்.

 

இந்நிலையில் மீனாவிற்கு இசக்கிபாண்டி என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த மீனா, நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரியைச் சேர்ந்த முத்து என்பவரை 2 வது திருமணம் செய்திருக்கிறார். இந்த திருமண விவகாரம் அவரது குடும்பத்தார்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. ஆனாலும் அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட மீனாவின் பெற்றோர்களுக்குக் கடுமையான ஆத்திரம், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

 

இதனிடையே நேற்று முன்தினம் இரவு தாதன்குளத்தில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு மீனா தன் உறவினர் பார்வதியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். தகவலறிந்த மீனாவின் தந்தை சுடலைமுத்து, சித்தி முப்புடாதி, தம்பி மாயாண்டி, உறவினரான வீரம்மாள், இவரது மகன் முருகன் ஆகியோர் சென்று மீனாவிடம் அவளது 2 வது திருமணம் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அது சமயம் மீனாவிற்கும், குடும்பத்தார்களுக்கும் வாக்குவாதம் முற்றி, தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த சுடலைமுத்து உள்ளிட்ட குடும்பத்தார் மீனாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்து இரத்தச் சகதியில் சரிந்த மீனா சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

thoothukudi second marriage incident... police investigation

 

தகவலறிந்த செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள், எஸ்.ஐ.கருத்தையா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தவர்கள், மீனாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள், வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்து மாயாண்டி முப்புடாதி, வீரம்மாள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். தப்பித் தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர்.

 

பெற்ற மகளை குடும்பமே வெட்டிக் கொன்ற சம்பவம் செய்துங்கநல்லூர் ஏரியாவை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. அண்மையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதற்காக மணமகன் மணப்பெண்ணின் சகோதரர்களால் சாலையில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தூத்துக்குடியில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.