Skip to main content

உயிருக்கு அச்சுறுத்தல் என திருமா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

 

thirumavalavan Case finishes

 

விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதற்கு உரிய பாதுகாப்பினை வழங்கவேண்டும் வழக்கு தொடுத்திருந்தார். 2016 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கை கடந்தமாதம் விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு காலம் கடந்துவிட்டது என வழக்கை முடித்துவைத்ததுடன்   டிஜிபியிடம் புது மனுவை கொடுக்கவேண்டும் என அறிவுறித்திய நிலையில் கொடுக்கப்பட்ட மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் வழக்கு தொடுத்திருந்தார் மேலும் வழக்கில் கடலூர் எஸ்பியையும் சேர்த்திருந்தார். 

 

 

அதற்கு எதிராக கடலூர் எஸ்பிஐ சரவணன் கொடுத்த மனுவில் கடந்த 2009, 2016 தேர்தலிலும் சரி இப்போது நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் சரி அவரது உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை,மேலும் அவர் போகும் இடங்கள் தங்கும் இடங்களில் வேண்டிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என மனுவில் கூறியிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.  

 

 

சார்ந்த செய்திகள்