Skip to main content

''மழைக்கால தவளையைப் போல் கத்தினார்கள் மலரும் மலரும் என்று'' - திருமா பேச்சு

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
nn

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்ற நிலையில் கோவையில் திமுக கூட்டணியின் வெற்றியை கொண்டாடுவதற்காக முப்பெரும் விழா நடத்தப்படும் என திமுக அறிவித்திருந்தது. அதன்படி இன்று திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்க கோவையில் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவன், துரை வைகோ, ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மேடையில் தொல்.திருமாவளவன் பேசுகையில், ''தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்கள் என அனைத்திலும் அடுத்தடுத்து வெற்றியைச் சந்தித்துள்ளது திமுக. இப்பொழுது நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில், ஏன் இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி தொடர் வெற்றியைப் பெற்ற ஒரு கட்சி; ஒரு தலைமை எதுவுமே இல்லை. இதை நாம் வெளிப்படையாக பாராட்டியாக வேண்டும். அதற்குக் காரணம் அவருடைய அணுகுமுறை தான்; அவர் கையாளுகின்ற உத்திகள்தான்; அவருடைய ஆளுமைதான்; அவர் வழி நடத்தி வருகின்ற இந்தக் கூட்டணியின் பலன்தான்.

2019 க்கு முன்னரே காவிரி நீர் பிரச்சனையை ஒட்டி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கினார். அது இன்றும் தொடர்கிறது. பொதுவாக தேர்தல் காலத்தில் கூட்டணிகள் அமையும் உடனே கலைந்து போய் விடுவார்கள், சிதறி போய்விடுவார்கள். அந்தக் கூட்டணியில் அடுத்த தேர்தல் வரை தொடர்வது கிடையாது. அதிமுக பாஜக கூட்டணி அப்படித்தான். ஆனால் திமுகவின் தலைமையில் உருவாகியுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னரே மக்களின்  பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து உருவான கூட்டணி. டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை முன்னிறுத்தி உருவான கூட்டணி. அதுதான் இன்றைக்கும் தொடர்கிறது.

நான்கு தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது. எந்தச் சலசலப்பும் இந்தக் கூட்டணியில் இல்லை; சிதறல் இல்லை. ஒரே நாள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகளை பங்கீடு செய்து உடனே களத்துக்கு வேட்பாளர்களை அனுப்பியவர் அணியின் தலைவர், தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுதான் அவருடைய ஸ்டேடர்ஜி. அதுதான் அவருடைய பலம். தொகுதிப் பங்கீடு செய்கின்ற போது கூட கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும்; கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் எந்த நிலையிலும் வெற்றி வாய்ப்பை இழந்து விடக்கூடாது அதில் கவனம் செலுத்துகிற ஒரு தலைவர்.

உதாரணத்திற்கு இதே கோவை தொகுதியில் போன முறை 2019-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை நீங்கள் கோவையில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு நாங்கள் வென்ற  திண்டுக்கல் தொகுதி தருகிறோம். ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி, அந்தத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு கோவையில் இந்த ரிஸ்கை நாங்கள் எடுக்கிறோம். இங்கே ஒருவர் மழைக்காலத்து தவளையைப் போல் கத்திக் கொண்டு இருக்கிறார் 'தாமரை மலரும்.. தாமரை மலரும்..' என்று. திமுக வீழும், திமுக கூட்டணி வீழும் என்று உளறிக்கொண்டு இருக்கிறார். சாதிக்க போகிறோம் என்று நாடு முழுக்க நடந்து போகிறார். கோவையில் வெற்றி உறுதி உறுதி என்று திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு வேண்டாம் அந்த ரிஸ்க் என திமுக போட்டியிட்டது. தமிழகத்தில் பாஜக எப்பொழுதும் வேரூன்ற முடியாது'' என்றார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தற்காலிக சபாநாயகர் நியமனம்; காங்கிரஸ் எதிர்ப்பு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Appointment of Temporary Speaker; Opposition to Congress

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் குறித்த உத்தரவை இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதேநேரம் தற்காலிக சபாநாயகர் நியமனத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நாடாளுமன்ற விதிகளை பாஜக மீதியுள்ளது என தெரிவித்துள்ள காங்கிரஸ், சபாநாயகர் தேர்தலுக்கு முன் மூத்த எம்.பி தான் அவைக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது விதி. 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடி குன்னிலை நியமிக்கவில்லை. தற்காலிக சபாநாயகராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தப்  ஏழு முறை மட்டுமே எம்.பியாக இருந்தவர் என காங்கிரஸ் விமர்சனத்தை வைத்துள்ளது.

Next Story

'முதல்வர் பதவி விலக வேண்டும்' - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
AIADMK announced the protest 'cheif minister must resign'

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

AIADMK announced the protest 'cheif minister must resign'

''இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இந்தநிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி வருவாய் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.