Skip to main content

“ஆட்டை மாட்டை அடிக்கிற மாதிரி அடித்து விட்டார்கள்; ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள்'' - ரூபி மனோகரன் பேட்டி

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

 'They beat a goat like a cow; They put the soil in the desire'' - Ruby Manokaran interviewed

 

காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.  ரூபி மனோகரன் முறையாகப் பதிலளிக்கும் வரை அவரைத் தற்காலிகமாக நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகர், ''கே.ஆர்.ராமசாமி அவர்களிடம் எனக்கு கொஞ்சம் நாள் கொடுங்கள் என்று கேட்டேன். கொலை குற்றத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் கூட என் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க எனக்கு நாள் கொடுங்கள் என்று சொன்னால் கூட பத்து நாட்கள் கொடுப்பார்கள். இது எல்லா இடத்திலும் உள்ளதுதான். ஒரு விசாரணைக்கு கூப்பிடும் பொழுது நேரம் காலம் கேட்பது எல்லா இடத்திலும் உள்ளது தான். ஆனால் என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. ஐ ஃபீல் வெரி பேட். பத்து, இருபது ஆண்டுகளாக நான் என் தொழிலை கூட விட்டு விட்டேன். ஓஹோன்னு இருந்த என் தொழில் எல்லாத்தையும் இந்தக் கட்சிக்காக முழுக்க முழுக்க விட்டுட்டேன்.

 

இங்க நிக்கிற கிராமத்து மக்கள் எல்லார்கிட்டயும் கேளுங்க நான் எப்படி வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்னு. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். நான் தங்கபாலு கூட வேலை செய்திருக்கிறேன், அதேபோல் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட வேலை செய்திருக்கிறேன். திருநாவுக்கரசர் கூட வேலை செய்திருக்கிறேன். இப்பொழுது இருக்கும் தலைவர் கூடவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன் நான். இப்படிப்பட்ட செய்தி வந்த உடனே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையைச் சொன்னால் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 

கட்சியைப் பற்றியும் தலைவர்கள் பற்றியும் நான் எந்தக் குறையும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு மிகப்பெரிய வருத்தம் இருக்கிறது. என்னுடைய மக்கள், என்னுடைய பிள்ளைகள் களக்காட்டிலிருந்து வந்துள்ளார்கள். சென்னைக்கு வந்தவர்களை ஆட்டை மாட்டை அடிக்கிற மாதிரி அடித்து விட்டார்கள். அதற்கு யாரிடம் விளக்கம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேட்க வேண்டுமே தவிர நான் என்ன செய்தேன்? வாட் மிஸ்டேக் ஐ டன். எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் தமிழகத்திலேயே நம்பர் ஒன்னாக 35 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார்கள் இங்கு நிற்கிறவர்கள். வேறு எந்த தொகுதியிலாவது இந்த அளவிற்கு உறுப்பினர்கள் சேர்த்தார்களா என்று கேளுங்கள்.

 

உயிரோட்டமாக இருக்கிறது கட்சி, நல்லா இருக்கிறது கட்சி, வளர்ந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. பெருமையாக இருக்கிறது, சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. நான் முழுக்க முழுக்க என்னுடைய நேரத்தை இந்த நாங்குநேரி தொகுதி மக்களுக்காக இன்று முதல் முழுசாக ஒப்படைக்கிறேன். எனக்கு எந்த நடவடிக்கை எடுத்தாலும் கட்சி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன். என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வருத்தம் இருக்கிறது. இன்னும் இந்தக் கிராமத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள். சரி பரவாயில்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Congress struggles against the central government

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (30.03.2024) நாடு தழுவிய போராட்டம் நடத்த, அனைத்து மாநில தலைமையகம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமையகங்களில் அனைத்து காங்கிரஸ் பிரிவுகளுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Congress struggles against the central government

இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய ஜனநாயகத்தை முறியடிக்கும் முறையான செயல்பாட்டினை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கும் சட்டவிரோத முயற்சி நடந்து வருகிறது. நேற்று (28.03.2024) ரூ. 1823.08 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறையின் தகவல் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து புதிய நோட்டீஸ் வந்தது. ஏற்கனவே வருமான வரித்துறை காங்கிரசின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 135 கோடி ரூபாயை வலுக்கட்டாயமாக எடுத்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த மோசமான தாக்குதலையும், முக்கியமாக மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் கட்சி மீது வரிப்பயங்கரவாதத்தை சுமத்துவதையும் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை (30.03.2024) அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் மாபெரும் பொது ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Income tax notice to Congress, Communist Party of India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Income tax notice to Congress, Communist Party of India

இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.