Skip to main content

''எங்க மாவட்டத்துக்காரன் ஒருத்தன் இருக்கான்...''-முன்னாள் அமைச்சரை வெளுத்து வாங்கிய பொன்முடி!

Published on 24/09/2022 | Edited on 25/09/2022

 

DMK

 

சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக நிகழ்ச்சியில் பேசியிருந்த பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் திமுக முப்பெரும் விழாவில் பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னாள் அதிமுக அமைச்சரை வெளுத்து வாங்கினார்.

 

பொன்முடி பேசியதாவது, ''அதிமுக என்ற கட்சி இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுக்குள்ளேயே ஆயிரம் பேர் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருத்தன் இருக்கிறான், எங்க மாவட்டத்துக்காரன். அவன் பேரு சி.வி.சண்முகம். ஒரு வக்கீல், அவன் நேற்று பேசி இருக்கான். இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது. அவன் சொல்கிறான் ஸ்டாலின் என்னுடைய இதைக் கூட புடுங்க முடியாது என்று பேசுகிறான். அவன் எல்லாம் ஒரு லா மினிஸ்டராக இருந்தவன், சட்ட மந்திரியாக இருந்தவன். இப்பொழுது ராஜ்யசபா பார்லிமென்ட் உறுப்பினராக போய் இருக்கிறான். இவனை எல்லாம் மக்கள் மன்னித்து விடுவார்களா? தயவுசெய்து நினைத்துப் பாருங்கள்.

 

இதையெல்லாம் நினைத்து பார்த்துதான் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கெல்லாம் வெறி பிடித்துப் போய்விட்டது. இனிமேல் அவனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல எங்குமே அவன் கட்சியே கிடையாது. அவன் கட்சியே ஒழிஞ்சு போயிருச்சு. பிஜேபிகாரனுக்கு அடுத்தபடியா இவன் வருவான் போல இருக்கு. நான் அவன் இவன் என்று கூட பேசியதில்லை மரியாதையாக தான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று அந்த ஆள் பேசிய பேச்சை கேட்ட பொழுது நமக்கே வேகம் வருகிற அளவுக்கு பேசுகிறான் என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்களே எண்ணிப் பாருங்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் தான் திராவிடம் மாடல் ஆட்சி நடத்தக்கூடிய ஒரே தலைவர். அவரை போல் எவனாலும் முடியாது.

 

அது சில முண்டங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். வரலாறு தெரியாத நாய்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நானே இவ்வளவு வேகமாக பேச மாட்டேன். ஆனால் இப்படி பேச வைக்கிறார்கள் அவர்கள். அந்த அளவிற்கு அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் யாரோ புதிது புதிதாக வந்து மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டிவிட்டு எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விட முடியுமா? இந்த ஆட்சியை எப்படியாவது வரவிட முடியாமல் செய்துவிட முடியுமா என்று நினைக்கிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தில் நிரந்தர முதல்வர், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது'' என்றார் ஆவேசமாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.