திருப்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சனாதன தர்மத்திற்கு அழிவு என்பது கிடையாது. அழிவு எப்பொழுது வரும் ஆரம்பம் இருந்தால் மட்டும் தான் அழிவு வரும் எனக் கூறியுள்ளார்.
அவ்விழாவில் அவர் பேசியதாவது, “சமீபத்தில் பிரதமர் மோடி காசியில் ஒரு உரையாற்றினார். அதில் மிக முக்கியமாக அவர் கூறியது ‘மனிதர்கள் பிறக்கும் முன் இந்த பூமி இருந்தது. அது வாரணாசி காசி. அந்த மண்ணில் இருந்து பேசிக்கொண்டு இருக்கின்றேன். இந்த மண்ணின் மகத்துவம் என்பது, இந்த சனாதன தர்மத்தை யாரெல்லாம் அழிக்க முற்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் இந்த சனாதன தர்மம் தன்னையே உயிர்ப்பித்துக்கொள்ளும்” எனக் கூறுகிறார். சனாதன தர்மத்திற்கு அழிவு என்பது கிடையாது. அழிவு எப்பொழுது வரும் ஆரம்பம் இருந்தால் மட்டும் தான் அழிவு வரும்.
சனாதன தர்மத்தின் அடிப்படை என்பது நம்முடைய கர்மத்தை நம்முடைய வேலையை நாம் துணிந்து செய்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்வது” எனக் கூறியுள்ளார்.