Skip to main content

''என்னசெய்யுறது இப்படியும் சிலர் இருக்கின்றனர்...''-மேடையில் அமைச்சர் மா.சு சுவாரசிய பேச்சு

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

 "There are some people like this to do anything..." - interesting speech of Minister M. Su on the stage

 

இன்று 'நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசுகையில்,  ''அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு அதேநேரம் உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு என்ற வகையில், கடந்த மூன்று நாட்களாக இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டது என்னவோ 15 நாட்கள் முப்பது மணி நேரம். நடந்து எல்லா மக்களையும் சந்தித்து விடலாம் என்று எண்ணினோம். ஆனால் திட்டமிடப்பட்ட காலத்தில் எல்லோரையும் சந்திப்பது கஷ்டமாக இருக்கும் என்று கருதுகிறோம். போகின்ற இடங்களில் எல்லாம் மக்களுடன் பேசி அவர்களுடைய குறைகளை கேட்பது என்கின்ற வகையில் நேரம் எடுத்துக் கொண்டிருப்பதால் நிச்சயம் ஒரு 20 நாட்கள் 50 மணி நேரம் ஆகும் என்று கருதுகிறோம். ஆனாலும் சைதாப்பேட்டையை சுற்றி ஒரு 20 நாட்கள் 50 மணி நேரம் வீடு வீடாக வந்து உங்களுடைய குறைகளை கேட்க இருக்கிறோம்.

 

இப்பொழுது மூன்று நாட்கள் முடிவுற்றிருக்கிறது. தீபாவளி கழித்து மீண்டும் 27ஆம் தேதி 'நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க' நிகழ்வு தொடங்குகிறது. எனவே அந்த நிகழ்ச்சியிலும் ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் மனுக்களை அங்கே தரலாம். தாராள குணம் கொண்ட நமது மாவட்ட ஆட்சித் தலைவர் நிச்சயம் அனைவருக்கும் அதை ஆணையாக போட்டு தருவார் என்ற நம்பிக்கை மற்றும் உறுதியை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய பேருக்கு தெரியும் ஓய்வூதியம் என்றால் அது ஆதரவற்றவர்களுக்கு ஓய்வூதியம் என்று மட்டும் தான் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். விதவை தாய்மார்களுக்கும் ஓய்வூதியம் தரப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கும் உதவிதொகை கொடுக்கப்படுகிறது. இதில் கணவனால் கைவிடப்பட்டவர்கள் என சிலர் அரசாங்கத்தை ஏமாற்றும் முயற்சியை நிறைய பேர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

 

ஒரு சுவையான சம்பவத்தை சொல்ல வேண்டும் வட்டாட்சியராக இருந்தவர் மணிகண்டன். அவர் தற்போது இல்லை. வட்டாட்சியர் மணியிடம் கணவனால் கைவிடப்பட்டவர் என மனு வருகிறது. அவர் அந்த அம்மாவை கூப்பிட்டு விசாரிக்கிறார். 'என்னமா சின்ன வயசா இருக்கு 35, 40 வயசு தான் இருக்கும் உங்களுக்கு. கணவனால் கைவிடப்பட்டவர் என்று மனு கொடுத்துள்ளீர்களே' என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த அம்மா 'தாசில்தார் ஆபிசில் பணம் கொடுக்கிறார்கள் என்று சொன்னார்கள் அதனால் மனு போட்டுள்ளேன்' என்றார். 'உங்கள் வீட்டுக்காரர் என்னமா பண்றாரு' என்றதற்கு 'அதுவா வேலை பார்க்கிறது' என்றுள்ளார் அந்த அம்மா. 'சரி இப்ப எங்கம்மா உங்க வீட்டுக்காரர் இருக்காரு' என கேட்டதற்கு 'வீட்டில் தூங்குகிறார்' என்றுள்ளார். 'யார் வீட்டில் தூங்குகிறார்' என்ற கேள்விக்கு 'ம்ம் எங்க வீட்டில் தான் தூங்குகிறார்' என்று சொல்லி இருக்கிறார். இந்த மாதிரியும் இருக்கக் கூடாது. அரசாங்கத்தின் உதவித்தொகையை பெறுகிறோம் என்றால் உரியவர்களுக்கு அரசின் பணம் போய் சேர வேண்டும். அந்த வகையில் அந்தத் திட்டம் பயன்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.