Skip to main content

காதல் விவகாரம்... பெண்ணின் குடும்பத்தினரை வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

 

theni district periyakulam area  lovers police investigation

 

 

தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் அரசன் என்பவரின் மகன் சுதர்சன். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவில் மக்கள் தொடர்பு அலுவலராக தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார். 

 

இந்நிலையில் அவருக்கும் பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரம் பகவதியம்மன்கோயில் தெருவில் வசித்து வரும் ராமநாதன் என்பவரின் மகள் நவமணி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் கைப்பேசி மூலமாகவும், நேரடியாகவும் கருத்துகளை பரிமாறி காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும் காதல் திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதை அறிந்த காதலியின் சகோதரியும்,பெரியகுளம் மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியருமான பிரமிளாதேவி மற்றும் அவருடைய தாயார் அழகம்மாள், தாய்மாமன் சேதுராஜ் என்பவருக்கும் தெரியவரும் போது வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலனை திருமணம் செய்யக்கூடாது என்று நவமணியை எச்சரித்துள்ளனர். 

 

அதேசமயம் சுதர்சன் மீது ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி காவல் நிலையத்திலும் கா.விளக்கு காவல் நிலையத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பொய்யான புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை என்ற போர்வையில் அலைக்கழிப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் குண்டர்களை வைத்து பலமுறை சுதர்சனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வேறு சமூகத்தைச் சார்ந்த சுதர்சனை பழிவாங்கும் நோக்கோடு தொடர்ந்து பொய் புகார் கொடுப்பதை தடுத்து நிறுத்தவும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டுமென கோரி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நவமணி, பிரமிளாதேவி, அழகம்மாள், சேதுராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து விசாரணை செய்த பெரியகுளம் காவல்துறையினர், கடந்த 18- ஆம் தேதி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது  காதலன் சுதர்சனை சாதியை சொல்லி இழிவாக பேசியதாகவும் அவர்கள் வீட்டுக்கு வரவழைத்து தாக்கியதாகவும் சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளான சுதர்சனின் காதலி நவமணி மற்றும் அந்த பெண்ணின் சகோதரி பிரமிளாதேவி, தாயார் அழகம்மாள், தாய்மாமன் சேதுராஜ் ஆகியோர்களை வலைவீசி தேடி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.