Skip to main content

இருசக்கர வாகன எண் கொடுத்து மணல் திருட்டு! 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

tt

 

தமிழ்நாடு முழுவதும் விவசாயகள் தங்கள் தோட்டங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை அந்தந்த கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களில் அள்ளிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

 

தமிழக அரசு அனுமதியைத் தொடர்ந்து தற்போது வண்டல் மண் எடுப்பதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் அள்ளப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்கும் போதே, ஆழமாக வெட்டக்கூடாது, குறிப்பிட்ட அளவே மண் எடுக்க வேண்டும். டிராக்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. கூடவே மண் எடுக்கும் வாகனங்கள் பற்றிய பதிவு எண் ஆகியவற்றை பெற்று அனுமதி கடிதத்தில் குறிப்பிட்ட வேண்டும். குறிப்பிட்ட விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை வருவாய் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும் அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

 

ஆனால், கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் எத்தனை வாகனம் ஓட்டப்படுகிறது என்பதை எல்லாம் கண்காணித்து பெரிய வசூல் வேட்டையாடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி, ஆலங்குடி உள்பட பல தாலுகாவை சேர்ந்த கண்காணிப்பு அதிகாரிகள் ஒரே நாளில் ஒரு லட்சம் வரை வசூல் செய்து முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளனர். இதனால் அரசின் விதிமுறைகள் காற்றில்பறக்கும் தூசுகளாக பறந்து வருகிறது.

 

அதே போல அறந்தாங்கி தாலுகாவில் உள்ள தினையாகுடி கிராமத்தில் உள்ள நமரங்குர் ஏரியில் வண்டல் மண் எடுக்க அந்த ஊலே இல்லாத ராஜ்மோகன் என்பவருக்கு ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அனுமதி அளித்துள்ளனர். அதில் மண் எடுக்க பயன்படுத்தும் 3 வாகனங்களின் எண்களும் பதிவு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற வாகனங்களைவிட பல மடங்கு வாகனங்கள் மண் அள்ளிச் சென்றதை கவனமாக பார்த்துக் கொண்டனர் கண்காணிப்பு அதிகாரிகள்.

 

tt

 

ஆனால் மண் எடுக்க பயன்படுத்திய வாகன எண்களை சிலர் இணையத்தில் தேடிய போது, பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது TN 55 BH 4363 என்ற எண்ணை ஆய்வு செய்யும் போது அது டி.வி.எஸ்.எக்ஸ்.எல் வாகனம் என்பதும் அதன் உரிமையாளர் ரெங்கன் மகன் சின்னத்தம்பி என்பதும் தெரிந்துள்ளது. எந்த ஊரில் எக்ஸ்.எல்-ல மண் அள்ளுவாங்க என்று சிரித்துவிட்டனர் அந்த எண்ணை ஆய்வு செய்தவர்கள்.

 

இப்படித் தான் போலி எண்களை கொடுத்து புரோக்கர்கள் மூலம் அனுமதி பெற்று மண் அள்ளுகிறார்கள் இதற்கு அனுமதி அளிக்கும் மாவட்ட அதிகாரிகள் வாகன எண்களை ஆய்வு செய்த பிறகு அனுமதி கொடுத்திருந்தால் இது போன்ற முறைகேடுகள் நடக்காது. ஆனால் இது போலி எண்கள் தான் என்று தெரிந்தும் கூட அனுமதி அளிப்பது தான் வேதனையே.

 

இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் புகார் சென்ற பிறகு சம்மந்தப்பட்ட தினையாக்குடி ஏரியில் மண் எடுப்பதை கண்காணிக்க சென்ற அதிகாரிகள் 13 வாகனங்களை நிறுத்தியுள்ளனர். ஆனால் அத்தனை வாகனங்களும் பறிமுதலா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

ஒரே ஒன்றியத்தில் 45 மாணவர்கள் தேர்ச்சி! மாநிலத்தில் முதலிடம்;  பாராட்டி பரிசு வழங்கிய அமைச்சர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
45 students passed in one union In the National Aptitude Test in aranthangi

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்புகளில் இருந்தே போட்டித் தேர்வுத் திறனை வளர்க்கும் விதமாக தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தி தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம், +2 முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போல 9, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டில் நடந்த தேசிய திறனாய்வுத் தேர்வில் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் 179 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 78 பேர் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக, அறந்தாங்கி ஒன்றியத்தில் மட்டும் 17 பள்ளிகளைச் சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். மேலும், பெரியாளூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து மட்டும் 10 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதே போலம், குன்னக்குரும்பி அரசுப் பள்ளியில் படிக்கும் 8 மாணவ, மாணவிகள் தேர்வாகி உள்ளனர். ஆவணத்தான்கோட்டை கிழக்கு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.

போட்டித் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களையும் பாராட்டும் விதமாக கல்வித்துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக்கல்வி) சண்முகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். மேலும் அவர், சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களை பாராட்டி கேடயம் வழங்கி பொன்னாடை அணிவித்தார்.  

இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது, “மாணவர்களை இளம் வயதிலேயே போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்கும் இந்த தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களையும், ஊக்கப்படுத்திய கல்வித்துறை அதிகாரிகளையும், பாராட்டுவதோடு சாதித்துக் காட்டிய மாணவ, மாணவிகளையும் மனதார பாராட்டுகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக் கிழமையில், நான் பெரியாளூர் மேற்கு வழியாக சென்ற போது, அந்த ஊரில் இருந்த பள்ளியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆசிரியை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இறங்கிச் சென்று போய் அவரிடம், ‘என்ன பாடம் எடுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அந்த ஆசிரியை, தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பயிற்சி கொடுப்பதாக சொன்னார். இன்று அந்தப் பள்ளியில் இருந்து மகா சாதனை படைத்து ஒரே பள்ளியில் 10 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. விடுமுறையிலும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பயின்ற மாணவர்களுக்கும் பாராட்டுகள்.

கல்வி ஒன்றே அழிக்க முடியாத செல்வம். இன்று பாராட்டுப் பெற வந்த ஒரு மாணவன் எங்கள் பள்ளியில், மாணவிகளுக்கு கழிவறை உள்ளது, மாணவர்களுக்கு இ்ல்லை கட்டிக் கொடுங்கள் என்று கேட்டார். அந்த மாணவரை பாராட்டுகிறேன். இதற்கான துணிச்சலை கொடுத்தது கல்விதான். மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம். 

சிறந்த தலைமை ஆசிரியர் பச்சலூர் ஜோதிமணியின் முயற்சியால், நிறைய பள்ளிகள் மாறிக் கொண்டிருக்கிறது என்பது பெருமையாக உள்ளது. அதே போல அறந்தாங்கி ஒன்றியத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 122 மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்து சாதனை படைத்துள்ளனர். இது போன்ற சாதனைகளை ஒவ்வொரு பள்ளியிலும் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார். இந்த விழாவில் அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார், நகர்மன்றத் தலைவர் ஆனந்த், கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.