Skip to main content

அரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி...! இப்படியும் ஒரு நூதன திருட்டு!

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கரும்புலிபட்டி என்ற கிராமத்தில் சேர்ந்தவர் அண்ணாதுரை. ஐஸ் வியாபாரம் செய்து வரும் இவருக்கு வெள்ளபொண்ணு என்ற மனைவியும், ராமர் என்ற மகனும் உள்ளனர். தனியார் சீட்டு நிறுவனத்தில் ராமர் பணிபுரிந்து வருகிறார். அவர் மீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

 

 Theft near Trichy...police investigation


ராமர் மீனா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராமரை நாய் ஒன்று கடித்துவிட, அதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு பாம்பு ஒன்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து விலங்குகளால் குடும்பத்தில் உள்ள ஒருக்கும், வீட்டுக்கும் அச்சுறுத்தல் இருந்ததாக மீனாவும் அவரது மாமியார் வெள்ளபொண்ணும் கருதினர். இது ஏதோ அபசகுனமான  நிகழ்வு என்றும் அவர்கள் நினைத்திருந்தனர்.

இந்த சம்பவங்கள் நடைபெற்ற சில தினத்தில் காக்காய் அமர பனம்பழம் விழுந்தது போல் அண்ணாமலையும், ராமரும் வேலைக்கு சென்ற தருணத்தில் தெருவில் கிளி ஜோசியர் இருவர் வந்துள்ளனர். வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த மாமியார் வெள்ளப்பொண்ணும், மருமகள் மீனாவும் கிளி ஜோசியம் பார்ப்பதாக வந்த இருவர்களிடம் இப்படி எங்கள் வீட்டில் அபசகுனமான சில சம்பவங்கள் நடக்கிறது என முறையிட்டனர்.


 

 Theft near Trichy...police investigation

 

அப்போது மீனாவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறிய அந்தக் கிளி ஜோதிடர் அதை கழிக்க வேண்டும் என்று இருவரிடமும் கூறியுள்ளார். இதனை நம்பிய இருவரும் வீட்டிற்குள் கிளி ஜோதிடரை அழைத்து சென்றுள்ளனர். தேங்காய், சூடம், ஊதுபத்தி, குங்குமம் போன்ற பூஜை பொருட்களுடன் ஜோதிடர்கள் களமிறங்கினார். ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதுடன் தோஷம் கழிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பெண் உடலில் எந்த நகைகளும் இருக்கக் கூடாது எனக்கூறி இருவரிடமும் நகைகளை கழட்டிவைக்க சொல்லியுள்ளனர்.

 

 Theft near Trichy...police investigation

 

3 சவரன் நகைகளை கழட்டி ஜோதிடர்களிடம் கொடுத்த மாமியாரையும், மருமகளையும் முக்காடு போட்டு அமரச் சொன்ன அந்த மோசடி ஜோதிடர்கள் ஒரு கைப்பிடி அரிசியை ஒரு தாளில் வைத்து, இன்னொரு கைப்பிடி அரிசியை மற்றொரு தாளில் வைத்து, இருவரிடமும் கொடுத்து இரண்டு காகிதங்களில் உள்ள அரிசியை 238 வரை மாமியாரும், 237 வரை மருமகளும் எண்ண வேண்டும் கூறியுள்ளனர்.

 

 Theft near Trichy...police investigation

 

நீங்கள் எண்ணிக் கொண்டு இருங்கள் நாங்கள் மயானம் வரை சென்று அங்கிருந்து மண் எடுத்து வந்து அதன்மூலம் உருவம் செய்து பூஜையை தொடங்க வேண்டும் என கூறி நகைகளுடன் புறப்பட்டுச் சென்றனர். ஏமார்ந்ததுகூட தெரியாமல் மாமியாரும், மருமகளும் மெனக்கெட்டு காகிதத்தில் கொடுத்த அரிசி பருக்கைகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் மயானம் சென்று மண்ணை எடுத்து வருவதாகக் கூறிய அந்த இருவரும் வெகுநேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த மாமியார் வெள்ளபொண்ணு ஜோதிடர்கள் கொடுத்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய ஜோதிடர் யாரென்றே தெரியாதது போல் வேறு குரலில் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளபொண்ணு உடனடியாக மணப்பாறை போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

அந்த எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டபோது போலீசாரையே மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மோசடி ஜோதிடர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

மூட நம்பிக்கையில் அப்பாவிகள் பொருளை இழப்பது தினம் தினம் நடக்கக்கூடிய நிகழ்வாக மாறிவிட்ட நிலையில், அரிசியை எண்ணவிட்டு மாமியார் மருமகளிடம் நகைகளை திருடி சென்ற இந்த நூதன திருட்டை என்னவென்று சொல்வது!   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.