Skip to main content

''மூன்றாவது கணவனின் சொத்துக்காக குழந்தையை திருடினேன்''-பரபரப்பை கிளம்பிய சம்பவத்தில் பகீர் வாக்குமூலம்!

Published on 09/10/2021 | Edited on 11/10/2021

 

thanjai

 

தஞ்சை பர்மா காலனி கூலித் தொழிலாளி குணசேகரன் ராஜலட்சுமியை காதல் திருமணம் செய்ததால் இரு குடும்பங்களின் ஆதரவின்றி பிரசவத்திற்காகத் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க் கிழமை பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில், ''உனக்குத் தாயாக நான் இருக்கிறேன்'' என்று அன்பும் ஆதரவும் காட்டிய ஒரு பெண் வெள்ளிக்கிழமை காலை ராஜலட்சுமி குளியலறைக்குச் சென்ற பிறகு குழந்தையை ஒரு பச்சை கட்டைப் பையில் கடத்தி சென்றார். இந்த சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்த, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அந்த பெண்  ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரிக்க டி.எஸ்.பி கபிலன் தலைமையில் 3 தனிப்படை போலீசாரை நியமித்துத் தேடும் பணியை முடுக்கிவிட்டிருந்தார் மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா.

 

தொடர்ந்து ராஜலட்சிமியிடம் நடத்திய விசாரணையில்,  கடைசியாக குழந்தையின் அடையாள எண் உள்ள அட்டை ஒன்று அந்தப் பெண் வாங்கிச் சென்றார் என்று கூறியுள்ளார். அந்த அடையாள எண் கொண்ட அட்டையை மருந்தகத்தில் தான் பயன்படுத்த முடியும் என்பதால் உடனே போலீசார் மருந்தகத்தில் குவிந்திருந்த அடையாள அட்டைகளை ஆய்வு செய்தபோது அதில் எழுதி இருந்த செல்போன் எண்ணை எடுத்து முகவரி பார்த்தபோது பட்டுக்கோட்டை முகவரி காட்டியுள்ளது. உடனே பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக்கண்ணனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி டீம் சம்மந்தப்பட்ட செல்போன் எண்ணைப் பயன்படுத்தும் பெண்ணை அழைத்து விசாரித்த போது எனக்கும் குழந்தை திருட்டுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். அப்போது குழந்தை திருடிச் சென்ற பெண்ணின் சிசிடிவி படத்தைக் காட்டியபோது அந்த பெண்ணின் சேலை கலரைப் பார்த்தவுடன் இது என் தோழி விஜி எனத் தெரிவித்துள்ளார். விஜிக்கு குழந்தை பிறந்திருப்பதாக சொன்னாங்க என்று சொல்லிக் கொண்டே விஜியுடன் அந்தப் பெண் இருக்கும் படத்தையும் காட்டியுள்ளார்.

 

பட்டுக்கோட்டை போலீசாருடன் தஞ்சை போலீசாரும் இணைந்து விரைந்து சென்று பாலமுருகன் என்பவர் வீட்டிலிருந்த விஜி மற்றும் கடத்தி வரப்பட்ட குழந்தையை மீட்டனர். உடனே குழந்தையைப் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர். விஜியை கைது செய்துள்ளனர்.

 

thanjai

 

விஜி போலீசாரிடம் கூறும் போது, ''என் 3 வது கணவர் பாலமுருகன். (அவருக்கு நான் 2 வது மனைவி) பாலமுருகனுக்கு குழந்தை பெத்துக்க ஆசைப்பட்டேன். ஆனால் கர்ப்பமாகல. அதனால அவரோட சொத்துகள் வேறு யாருக்காவது போய்விடுமோ என்ற கவலை எனக்கு. அதனால கடந்த 10 மாதமாகக் கர்ப்பமாக இருப்பது போல வயிற்றில் துணியைக் கட்டி நாடகமாடினேன். போன வாரம் பிரசவத்திற்காக தஞ்சாவூர் போறதா சொல்லிட்டு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு போனேன். அங்கே தான் யார் ஆதரவும் இல்லாமல் ராஜலட்சுமி தனியாக பிரசவமாகி தவிப்பதைப் பார்த்து நட்போட பழகி, கூட இருந்து கவனித்துக் கொண்டேன். வெள்ளிக்கிழமை ராஜலட்சுமி பாத்ரூம் போன நேரத்தில் குழந்தையைக் கட்டைப் பையில் வைத்துத் தூக்கிட்டு வந்து ஆட்டோவில் ஏறி புது பஸ் ஸ்டாண்ட் போய் பட்டுக்கோட்டை வந்துட்டேன். எனக்கு குழந்தை பிறந்திருக்குனு எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். மெடிக்கல்ல பேம்பர்ஸ் வாங்கும் போது போன் நம்பர் கேட்டாங்க என் நம்பர் கொடுத்தா மாட்டிக்குவோம்னு என் தோழி நம்பரைக் கொடுத்துவிட்டு வந்தேன்'' என்று கூறியுள்ளார்.

 

thanjai

 

குழந்தை திருடுபோய் 30 மணிநேரத்தில் மீட்கப்பட்டதால் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மீட்கப்பட்ட குழந்தை குணசேகரன்-ராஜலட்சுமியிடம் ஒப்படைத்த போது போலீசாரின் காலில் விழுந்து நன்றி கூறியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.