Skip to main content

தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

 Thangamthennarasu appointed Finance Department; Official notification

 

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் ராஜ்பவனிலிருந்து வெளியிடப்பட்டது.

 

அதன்படி தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்பதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

தற்பொழுது புதியதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கான துறை மற்றும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியான தகவலின்படி  டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு மனோ தங்கராஜ் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்து பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' - தமிழக முதல்வர் அறிவுறுத்தல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

storm warning; Chief Minister's insistence

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். கனமழையால் மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க அரசு துறைகள் ஒருங்கிணைந்து தயார் நிலையில் உள்ளது. உணவு, உடை, மருத்துவம் ஆகிய அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் நிவாரணப் பணிகளை செய்திட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் நின்று மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் புகுந்த பாம்பு; அதிகாரிகள் அலறி அடித்து ஓட்டம்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 A snake entered the Secretariat; The officers ran screaming

 


சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலாளர் அலுவலகத்திற்குள் சாரைப்பாம்பு புகுந்ததாக தீயணைப்பு மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தீயணைப்புத் துறையினர் உடனடியாக பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் உள்ளே சென்றுள்ளனர்.

 

ஒவ்வொரு அறையாகச் சென்ற அந்த சாரை பாம்பு அலுவலகத்திற்கு வெளியே உள்ள புல்வெளிக்குள் புகுந்துள்ளது. புல்வெளியில் சிக்கி உள்ள சாரை பாம்பை தேடும் பணியில் காவல்துறையினரும், தீயணை துறையினரும் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் அங்குள்ள அலுவலர்கள், ஊழியர்கள் மட்டத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்