Skip to main content

“கையெழுத்திட எப்படி உரிமை இருக்கிறதோ.. ஆராயவும் உரிமை இருக்கிறது” - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

thamilisai soundarajan taiks about online rummy

 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைக்கு கடந்த அதிமுக ஆட்சியில், 2020 ஆம் ஆண்டு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த அவசரச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.  

 

அதன் பிறகு பொறுப்பேற்ற திமுக அரசு, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு அரசிடம் அதன் அறிக்கையை கடந்த ஜூன் மாதம் சமர்ப்பித்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி தமிழக அமைச்சரவை சார்பில் ஆன்லைன் விளையாட்டு தடைக்கான அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து ஆளுநரும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

 

thamilisai soundarajan taiks about online rummy

 

இந்த அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இம்மசோதா மீது ஆளுநர் சில விளக்கங்களை கேட்ட நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கங்களை அளித்தார். ஆனாலும், ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசரச் சட்டம் காலாவதி ஆனது. இதனால், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை இல்லாத சூழல் உருவாகி உள்ளது.

 

இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கோப்புகளில் கையெழுத்து இடுவது தொடர்பாக ஆளுநர்களுக்கு என்று ஒரு முக்கியத்துவம் இருக்கும். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் அரசிடம் சில விளக்கங்களைக் கேட்டு உள்ளார். அரசு அதற்கான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். அதன் பின்பு ஆளுநர் முடிவு எடுப்பார்.

 

thamilisai soundarajan taiks about online rummy

 

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் விசயத்தில் ஏன் ஆளுநர் மீது மட்டும் திரும்பத் திரும்பக்  குறை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு கோப்பு வந்த உடனே  அதைப் பற்றி  தெரியாமலேயே ஆளுநர்கள் கையெழுத்துப் போட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்து போடும் உரிமையை எப்படி கொடுத்துள்ளதோ, அதேபோன்று ஆளுநர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் தொடர்பாக அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு உள்ளது. அந்த உரிமையை அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.