திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்ஜான்சிராணி. இவரும், இவர் கணவரின் தாயாரும் வீட்டில் நேற்று மதியம் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது,ஜான்சிராணியின்மாமியார் வெளியே சென்றுள்ளார்.அந்தச்சமயத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் சுவர்ஏறிக்குதித்து வீட்டிற்குள் சென்று உறங்கிக்கொண்டிருந்தஜான்சிராணியின் கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தாலிசெயினைபறிக்க முயன்றுள்ளார். அதில்,ஜான்சிராணிசுதாரித்துக்கொண்டுசெயினை கையால்பிடித்துள்ளார். ஆனால், மர்ம நபர்செயினைஅறுத்துக் கொண்டு கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்துஜான்சிராணிமணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துசிசிடிவிபதிவுகளைக்கொண்டு மர்மநபரைத்தேடி வருகின்றனர்.
திருச்சியில் பயங்கரம்! பகலில் வீடு புகுந்து பெண் கழுத்தில் இருந்து செயின் பறிப்பு!
Advertisment