Skip to main content

கோயில் திருட்டு வழக்கு; பலியான சிறுமி... காப்பகத்தில் பரிதவிக்கும் மற்ற குழந்தைகள்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

Temple theft case police arrested two

 

புதுக்கோட்டை மாவட்டம், அன்டக்குளம் அருகே கிள்ளனூர் சுற்றியுள்ள கிராமங்களின் கோயில்களில் கடந்த 14ம் தேதி ஒரு குடும்பத்தினர் கோயில் பாத்திரங்களைத் திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்பிச் செல்ல முயற்சித்தனர். ஆனால், சுற்றுவட்டார கிராம இளைஞர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிள்களில் அவர்கள் சென்ற ஆட்டோவை விரட்டிச் சென்றனர். இளைஞர்கள் விரட்டி வருவதைப் பார்த்த ஆட்டோவில் இருந்தவர்கள் திருடிய கோயில் பாத்திரங்களை சாலைகளில் வீசிச் சென்றனர். விடாமல் விரட்டிச் சென்ற இளைஞர்கள் மச்சுவாடியில் ஆட்டோவைப் பிடித்துள்ளனர்.

 

ஆட்டோவை நிறுத்தியதுடன் ஆட்டோ மற்றும் அந்த ஆட்டோவில் இருந்தவர்களை கம்புகள் மற்றும் கையால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் ஆட்டோவில் கோயில் பாத்திரங்களை திருடிச் சென்ற கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த சக்திநாராயணசாமி மற்றும் அவரது மனைவி லில்லி புஷ்பா, அவர்களின் 2 மகன்கள், 2 மகள்கள் என 6 பேரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கற்பகாம்பிகா என்ற சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் 16ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி பலியான சம்பவத்தில் சிறுமியின் தாய் லில்லி புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் முதலில் அடையாளம் தெரியாத 30 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பிறகு 6 பேரை கைது செய்தனர். இந்த கைதினைக் கண்டித்து அன்டக்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

 

அடித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடல் பெற்றோர்கள் முன்னிலையில் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்ட நிலையில், கோயில் பொருட்களை திருடியதாக நாராயணசாமி மற்றும் அவரது மனைவி, ஒரு மகனை கைது செய்தனர் போலீசார். ஆதரவில்லாமல் தவித்து நின்ற மற்ற ஒரு மகன் மற்றும் ஒரு மகளை குழந்தைகள் பாதுகாப்பு குழுவான சைல்டு லைன் குழுவினர் மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணை செய்து அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இரவு நேரத்தில் குழந்தைகளை கடலூர் அழைத்துச் செல்ல முடியாது என்பதால் தற்காலிகமாக குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

 

இந்த நிலையில், இன்று காலை சகோதரியை இழந்து, பெற்றோர் சிறையில் இருக்கும் நிலையில் அந்த 2 குழந்தைகளும் கடலூர் குழந்தைகள் நல குழுமத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இந்த நிலையில், குழந்தை கற்பகாம்பிகாவை கொடூரமாகத் தாக்கிக் கொன்றவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை முயற்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Arrested old man attempted to incident

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.

Arrested old man attempted to incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் புதுச்சேரி அரசு, ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. கருணாஸும், விவேகானந்தனும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள விவேகானந்தன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குளிக்க பயன்படுத்தும் சோப்பைச் சாப்பிட்டும், துணியால் முகத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.