Skip to main content

''யார் கிட்ட வேணும்னாலும் சொல்லுங்க...'' சர்ச்சையை ஏற்படுத்திய வி.ஏ.ஓ.வின் வீடியோ!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

 '' Whoever wants to tell ... '' Controversial VAO video!

 

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து பல இடங்களில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிவரும் நிலையில், பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், பயிர்க் காப்பீடு அடங்கல் சான்று வாங்கக் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர், தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு விவசாயிகளை நேரடியாக வரவழைத்துப் பயிர்க் காப்பீடு அடங்கல் சான்று வழங்குவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் மார்த்தாண்டபட்டி ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் வினோத் என்பவர் பயிர்க் காப்பீடு அடங்கல் சான்றிதழ் வழங்க விவசாயிகளை மணிக்கணக்கில் காக்க வைத்ததோடு, அடங்கல் சான்றிதழுக்கு தலா 100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கேள்வி எழுப்பினால், விவசாயிகள் தாமாக விருப்பப்பட்டுக் கொடுப்பதால் வாங்கிக்கொள்வதாகக் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், 

 

 '' Whoever wants to tell ... '' Controversial VAO video!

 

பயனாளி: இதையெல்லாம் மேலதிகாரிகளிடம் சொல்லவா?

 

கிராம நிர்வாக அலுவலர்: நீங்கள் மேலதிகாரியிடம் கூட சொல்லுங்க. எனக்குப் பிரச்சனை இல்லை. யார் கிட்ட வேணாலும் சொல்லுங்க. 

 

பயனாளி: நீங்கள் வாங்குகிறீர்கள் கட்டாயப்படுத்தி... 

 

கிராம நிர்வாக அலுவலர்: நான் யாரிடமும் கட்டாயப்படுத்தி வாங்கவில்லை. யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்க, நான் கட்டாயப்படுத்தி வாங்குகிறேனா என்று. 

 

பயனாளி: அவர்களே விருப்பப்பட்டுக் கொடுக்கிறார்களா?

 

கிராம நிர்வாக அலுவலர்: ஆமாம் அவர்களே கொடுக்கிறார்கள்.

 

என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.