Skip to main content

ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக... பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்த வட்டாட்சியர்...

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
dmk

 

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சில அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 18-8-2020 ஆம் தேதி கலை 9 மணி அளவில் குழுமூர் நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செந்துறை ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது தொடர்பாக 15-8-2020 ஆம் தேதி காலை 12 மணி அளவில் வட்டாட்சியர் முத்துக் கிருஷ்ணன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

 

இதில் திமுக ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி, குழுமூர் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி, ஒன்றியக் குழு உறுப்பினர் ம. ரெங்கநாதன், அரியலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு. உமாசங்கர் மகேஷ்வரன், கொள்முதல் அலுவலர் எஸ். வரதராஜன், செந்துறை காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன்,மாத்தூர் பகுதி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாளவந்தார், ஆகியோர் கலந்து கொண்டனர். 

 


பேச்சுவார்த்தையின்போது, விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொருட்டு கிடங்கு அமைக்க கோரியதற்கு மேற்கண்ட கிராம புல எண் 234/1 -1.48.5ஹெக்டேர் வண்டிப்பாதை புறம்போக்கில் தற்போது பயன் பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், வனத்துறை அலுவலர் குடியிருப்பு மற்றும் வங்காரம் சாலை ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை தவிர்த்து மீதமுள்ள நிலத்தினை அளவீடு செய்து சுமார் 1 ஏக்கர் இடத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்வதற்கான கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்படும் என வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்டது.

 

மேற்படி கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் மேற்கண்ட இடத்தில் மூன்று மாத காலத்திற்குள் நெல் கொள்முதல் கிடங்கு மற்றும் களம் அமைத்து தரப்படும் என்று அரியலூர் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளரால் தெரிவிக்கப்பட்டது. 

 

மேலும் டோக்கன் கொடுக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படாத நெல்லை வரும் திங்கள் முதல் முழுவதும் கொள்முதல் செய்துவிடுவதாக மேலாளரால் உருதியளிக்கப்பட்டது. 

 

பருத்தி கொள்முதல் நிலையம் துவங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறையை கலந்து ஆலோசித்து அதற்கான இடத்தையும் ஒதுக்கி தருவதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். 

 

மேற்கண்ட விவரங்களை தெரிவிக்கப்பட்டதன் பேரில் திமுக கட்சி சார்பில் 18-8-2020 அன்று நடத்தப்படுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 

 

பேச்சுவார்த்தையில் திமுக மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் துரை. தேன்துளி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ஆ. தமிழ்மாறன், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் வீரா. இராசேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இர. ஆனந்த்ராஜ், குழுமூர் கழக முன்னோடிகள் மகாலிங்கம், செல்வராசு, இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.