Skip to main content

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அதிகாலையில் கைது

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

nn

 

சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சம வேலைக்கு சம ஊதியம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சில தினங்களாக சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ச்சியாக எட்டாவது நாளாக போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் சில ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர் .

 

இந்நிலையில் போராட்டம் தொடர்பாக அமைச்சருடன் ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 'நிதிச் சுமை இருப்பதால் எதுவும் செய்ய முடியாது, கலைந்து செல்லுங்கள். எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்' எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.

 

nn

 

இந்நிலையில் இன்று அதிகாலை டிபிஐ அலுவலகத்திற்கு வந்த 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குண்டுக்கட்டாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றி கைது செய்தனர்.  

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு, விஷ பூச்சிகளை பிடிக்க பிரத்யேக எண்கள் அறிவிப்பு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Notification of special numbers for catching snake venomous insects

 

                                                       கோப்புப்படம் 

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

மழை வெள்ளத்தில் பாம்பு, விஷப்பூச்சிகள் பாதிப்புகள் இருந்தால் அவற்றை பிடிப்பதற்கான எண்கள் வழங்கப்பட்டுள்ளது. போரூர், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, நெற்குன்றம், கோயம்பேடு பகுதிகளில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு பாபா (98 41 58 88 52) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம், பெரம்பூர் பகுதிகளுக்கு சக்தி (90 94 32 13 93) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  அண்ணா நகர் முதல் பட்டாபிராம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு கணேசன் (74 48 92 72 27) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ஜெய்சன் (80 56 20 48 21) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு ராபின் (88 07 87 06 10) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, மணிகண்டன் (98 40 34 66 31) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ரவி (96001190810) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நிவாரண முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Chief Minister M.K.Stal's inspection at the relief camp

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

இந்நிலையில் சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கேட்டறிவதோடு, ஆய்வு நடத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, அமைச்சர் கே.என்.நேரு, அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கு உள்ளனர். வடசென்னை பகுதியான கண்ணப்பர் திடல் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வரை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சிந்தாதரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று  தமிழக முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்