Skip to main content

பிணமாக மீட்கப்பட்ட ஆசிரியர்! நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Teacher passes away relatives demand police to took action

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கண்டமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(52). இவர், தனது ஊருக்கு அருகிலுள்ள கம்மன் தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 

 

இவர், திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் பகுதியில் திருமண மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார். அந்தத் திருமண மண்டபம் கட்டுவதற்காக ஆத்தூரைச் சேர்ந்த ஒருவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அந்த ஐந்து லட்சம் ரூபாயான அசலையும், அதற்கு வட்டியையும் ஒரே ஆண்டில் 11 லட்சமாக திருப்பி செலுத்த வேண்டும் என்ற கண்டிஷன் பெயரில் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்கு காலதாமதமாகி உள்ளது. அதனால் கோபமடைந்த வட்டிக்கு பணம் கொடுத்த ஆத்தூர் நபர், ஆசிரியர் அண்ணாமலையின் திருமண மண்டபத்தின் சாவியை மிரட்டி பிடுங்கி வைத்துக்கொண்டு அந்த மண்டபத்தை அவர் நடத்தி வந்துள்ளார். மேலும் அண்ணாமலை, சிலரிடம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதற்காக பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்தை திருப்பித் தருவதற்கும் காலதாமதம் ஆகியுள்ளது. அதனால், பணம் கொடுத்த அவர்களும் கொடுத்த பணத்திற்கு வட்டியுடன் தருமாறு நிர்ப்பந்தம் செய்துள்ளனர். மேலும், அவர்களும் அத்திருமண மண்டபத்தை எழுதித்தருமாறு ஆசிரியர் அண்ணாமலையை மிரட்டி வந்துள்ளனர். 

 

இப்படி சுற்றிலும் கடன் தொல்லை தாங்க முடியாத ஆசிரியர் அண்ணாமலை, மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் ஆளாகி இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போயுள்ளார். அதன் பிறகு நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவர் இறப்பதற்கு முன்பு, கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்திய ஆத்தூரைச் சேர்ந்த நபர், வட்டிக்கு பணம் கொடுத்த பத்திர எழுத்தர் ஒருவர், மேல்மலையனூர் ஆசிரியர், கல்வித்துறை அதிகாரி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்புமாறு குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி வைத்திருக்கிறார். 

 

இதனிடையே, கந்துவட்டிக்கு கடன் கொடுத்த நபர்கள் கொடுத்த நெருக்கடி, மிரட்டல்  தான்  ஆசிரியர் தற்கொலைக்கு காரணம். எனவே, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஆசிரியரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். ஆசிரியர் தற்கொலை சம்பவம் தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியருக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்து மிரட்டிய ஆத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன், பத்திர எழுத்தர் உட்பட கடன் கொடுத்து ஆசிரியரை மிரட்டிய அத்தனை பேரையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.