Skip to main content

பிணமாக மீட்கப்பட்ட ஆசிரியர்! நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Teacher passes away relatives demand police to took action

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கண்டமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(52). இவர், தனது ஊருக்கு அருகிலுள்ள கம்மன் தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 

 

இவர், திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் பகுதியில் திருமண மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார். அந்தத் திருமண மண்டபம் கட்டுவதற்காக ஆத்தூரைச் சேர்ந்த ஒருவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அந்த ஐந்து லட்சம் ரூபாயான அசலையும், அதற்கு வட்டியையும் ஒரே ஆண்டில் 11 லட்சமாக திருப்பி செலுத்த வேண்டும் என்ற கண்டிஷன் பெயரில் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்கு காலதாமதமாகி உள்ளது. அதனால் கோபமடைந்த வட்டிக்கு பணம் கொடுத்த ஆத்தூர் நபர், ஆசிரியர் அண்ணாமலையின் திருமண மண்டபத்தின் சாவியை மிரட்டி பிடுங்கி வைத்துக்கொண்டு அந்த மண்டபத்தை அவர் நடத்தி வந்துள்ளார். மேலும் அண்ணாமலை, சிலரிடம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதற்காக பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்தை திருப்பித் தருவதற்கும் காலதாமதம் ஆகியுள்ளது. அதனால், பணம் கொடுத்த அவர்களும் கொடுத்த பணத்திற்கு வட்டியுடன் தருமாறு நிர்ப்பந்தம் செய்துள்ளனர். மேலும், அவர்களும் அத்திருமண மண்டபத்தை எழுதித்தருமாறு ஆசிரியர் அண்ணாமலையை மிரட்டி வந்துள்ளனர். 

 

இப்படி சுற்றிலும் கடன் தொல்லை தாங்க முடியாத ஆசிரியர் அண்ணாமலை, மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் ஆளாகி இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போயுள்ளார். அதன் பிறகு நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவர் இறப்பதற்கு முன்பு, கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்திய ஆத்தூரைச் சேர்ந்த நபர், வட்டிக்கு பணம் கொடுத்த பத்திர எழுத்தர் ஒருவர், மேல்மலையனூர் ஆசிரியர், கல்வித்துறை அதிகாரி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்புமாறு குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி வைத்திருக்கிறார். 

 

இதனிடையே, கந்துவட்டிக்கு கடன் கொடுத்த நபர்கள் கொடுத்த நெருக்கடி, மிரட்டல்  தான்  ஆசிரியர் தற்கொலைக்கு காரணம். எனவே, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஆசிரியரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். ஆசிரியர் தற்கொலை சம்பவம் தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியருக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்து மிரட்டிய ஆத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன், பத்திர எழுத்தர் உட்பட கடன் கொடுத்து ஆசிரியரை மிரட்டிய அத்தனை பேரையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.