Skip to main content

அங்கெல்லாமா பச்சை குத்துவது; இளைஞரின் உயிரைப்பறித்த டாட்டூ

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

NN

 

டாட்டூ கலாச்சாரம் பழையது என்றாலும் தற்போது நவீன முறையில் டாட்டூக்களை போட்டுக்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஊருக்கு ஊர் டாட்டூ ஸ்டுடியோக்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் கைகள் மட்டுமல்லாது உடலின் வேறு சில இடங்களில் டாட்டூ செலுத்திக்கொள்ளும் நடைமுறையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூரைச சேர்ந்த இளைஞர் கழுத்து பகுதியில் டாட்டூ போட்டுக்கொண்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பெரம்பலூரைச் சேர்ந்த பரத் என்ற 22 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டாட்டூ கடையில் கழுத்தின் பின் புறத்தில் நங்கூரம் குறியீட்டை போன்று டாட்டூ போட்டுள்ளார். கழுத்துப் பகுதியில் டாட்டூ போட்டதால் அந்த பகுதியில் புண் ஏற்பட்டு நரம்புகள் காயமடைந்தது. இதனால் நெறி கட்டிகொண்ட நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரத் சென்றுள்ளார். அப்பொழுது அந்த பகுதியில் சீழ் பிடித்திருந்தது தெரிய வர, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியன் கம்பியில் மோதி, கழ்விந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார், மணல் ஏற்றிவந்த லாரி உரிமையாளர்கள் உதவியுடன் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்தில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

செல்போனுக்காக வடமாநில இளைஞர் கொலை; பரபரத்த மதுரை

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

North State youth incident for cell phone;Madurai

 

இரவு நேரம் சாலையில் நடந்து சென்ற பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்து செல்போன் பறித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியில் பீகாரைச் சேர்ந்த சுபேஷ்குமார் மற்றும் சன்னி ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சாலை ஓரமாக நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு கும்பல் வடமாநில இளைஞர்களை வழிமறித்து செல்போனை கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில் பைக்கில் வந்த கும்பல் வடமாநில தொழிலாளர்கள் இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த சுபேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உயிரிழந்த சுபேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரவு வேளையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்